சூர்யாவுக்கு சுள்ளுனு கோபம்? சும்மா சும்மா கேட்டால்? இதுதான் "வணங்கான்" பிரச்சனையா? சமுத்திரகனி நச்
சென்னை: ஏதோ ஒரு காரணத்தால் வணங்கான் படத்திலிருந்து, நடிகர் சூர்யா விலகியதாக கூறப்படுகிறது.. எனினும் சமீபத்தில், இதற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் இயக்குனர் பாலா சொல்லியிருந்தார்.. இப்போது, பிரபல நடிகர் சமுத்திரகனி இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.
வணங்கான் படத்திலிருந்து சூர்யா ஏன் விலகினார் என்பது குறித்து, இயக்குனர் பாலா நேர்காணல் ஒன்றில் விளக்கம் தந்திருந்தார். அதில், "வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகவில்லை. கன்னியாகுமரியில் நேரடியாக ஷூட்டிங் நடத்தியதால் சூர்யாவை பார்ப்பதற்காக பல ரசிகர்கள் கூடிவிட்டனர். அதனால், ஷூட்டிங்கை சரியாக நடத்த முடியவில்லை. பிறகு நானும் சூர்யாவும் ஆலோசித்துதான் அந்த முடிவை எடுத்தோம். எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது" என்று கூறியிருந்தார்,

என்ன காரணம்: ஆனால், பாலா தந்த விளக்கத்தை சோஷியல் மீடியாவில் பலரும் ஏற்கவில்லை. இதில் வேறு ஏதோ காரணம் உள்ளதால்தான் சூர்யா அப்படத்திலிருந்து விலகியிருக்கலாம் என்று கமெண்ட்களை தெரிவித்திருந்தனர்..
அதிலும், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தந்திருந்த பேட்டியில், "பாலா சில பொய்யும் பேசுகிறார் என்பதுஆச்சரியமாக உள்ளது. "வணங்கான்" படத்திலிருந்து சூர்யா வெளியேறியதற்கு பாலா சொல்லும் காரணம் ஏற்க முடியல. தற்போதுகூட, RJ பாலாஜி டைரக்ஷனில் சூர்யா நடித்து கொண்டிருக்கிறார்.. தினமும் 2 ஆயிரம், 3 ஆயிரம் ரசிகர்கள் திரண்டு வரும்நிலையில, சூர்யா நடிக்காமலா இருக்கிறார்?
ஷூட்டிங் ஸ்பாட்: சூப்பர் ஸ்டார் ரஜினி ஷூட்டிங் போனால், கூட்டத்தை கன்ட்ரோல் பண்ண முடியாது. ஆனாலும் ஷூட்டிங் நடக்கதானே செய்யுது? கூட்டத்தை ஒழுங்குப்படுத்த முடியலேன்னா, அவரென்ன பெரிய டைரக்டர்?அந்த காரணத்தை கேட்டால் குழந்தை கூட சிரித்துவிடும். இதையெல்லாம் யாராவது நம்புவாங்களா? பாலாவுக்கு உண்மையான காரணத்தை சொல்ல முடியல" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பாலாவின் மிக நெருங்கிய நண்பரான சமுத்திரக்கனி இதுகுறித்த ரகசியத்தை உடைத்திருக்கிறார்.. "எனக்கு என்ன மன கஷ்டம் வந்தாலும் அதை பாலா சரியாக புரிந்து கொள்வார். அதைப்போல, நான் சோகமாக இருந்தால், உடனே அவருடைய ஆபீசுககு போயிடுவேன்.
வணங்கான்: அப்படித்தான் ஒருநாள், தம்பி சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகி விட்டார் என தெரிந்ததுமே உடனே பாலா ஆபீசுக்கு போனேன். அப்போது 2 பேருமே அரை மணி நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தோம்..
உடனே பாலா, "நம்ம மேலதான் தப்பு.. திருப்பி திருப்பி தேதி கேட்டால் அவரால் தரமுடியுமா? அதனால் தான் அண்ணன் தம்பிகளாக இருந்து விடுவோம்ன்னு சொல்லி விலகிட்டோம், சரியா?" என்று சொல்லி என் மனசை பாலா லேசாக்கினார். சரி, நீ கிளம்பு, அடுத்து என்ன ஏதென்று பார்ப்போம்"ன்னு சொல்லிட்டார். அதுக்கப்பறம்தான் அருண் விஜய் இந்த படத்தை செய்வதாக எனக்கு தகவல் வந்தது" என்று சமுத்திரகனி கூறியிருக்கிறார்.
உண்மை என்ன?: ஏதோ ஒரு காரணத்தால் சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டு வரும்நிலையில், பாலா ஒரு காரணத்தை ஏற்கனவே சொல்லியிருந்தார்.. இப்போது கால்சீட், தேதி பிரச்சனை என்று சமுத்திரகனி சொல்லி உள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications