தமிழுக்கு கல்யாணம் ஆனதை தெரிந்து கொண்ட மேக்னா.. சரஸ்வதி கேட்ட கேள்வி.. இனி நடக்கப்போவது இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் டிசம்பர் 7ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் தமிழுக்கு கல்யாணம் ஆனதை தெரிந்து மேக்னா அதிர்ச்சியாகி தன்னிடம் நமச்சி ஏமாற்றிய விஷயத்தை எல்லோரிடமும் போட்டுக் கொடுக்கிறார்.
அப்போது சரஸ்வதி மற்றும் கோதை குடும்பத்தினர் என்ன முடிவெடுத்தனர் என்பதை பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் மேக்னா மற்றும் கமலா அம்மா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கமலா இங்கிருந்து பெங்களூர் செல்வதற்குள் உங்கள் திருமணத்தை பற்றி பேச வேண்டும் என்று சொல்ல, அதற்கு மேக்னா திருமணம் ஆகிவிட்டால் நான் ஏன் பெங்களூர் வரப்போகிறேன் என்று சொல்ல அதற்கு கமலா ஆசைய பாரு என்று கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர்.
அடுத்த காட்சியில் தமிழ் வீட்டில் மேக்னா எப்படி இருக்கிறார் என்று விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு தமிழ் அவருடைய உடல்நிலை நன்றாக தான் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு உன் உயிரை காப்பாற்றிய மேக்னாவை அழைத்து விருந்து வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். உடனே தமிழ் மேக்னாவுக்கு போன் பண்ணி நாளைக்கு விருந்துக்கு வர சொல்லி போன் பண்ணி கூப்பிடுகிறார்.

பிறகு மேக்னாவும் கமலா அம்மாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது தமிழ் வீட்டிற்கு போனதும் திருமணத்தை பற்றி பேச வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை தொடர்ந்து காலையில் நமச்சி மேக்னாவை கூட்டிட்டு போக வருகிறார். அப்போது தமிழ் வீட்டிற்கு போகாமல் மேக்னாவை தடுக்க பார்க்கிறார். ஆனால் மேக்னா பிடிவாதமாக 12 மணிக்குள் போக வேண்டும். எதற்காக இப்படி நடந்து கொள்வீர்கள் என்பது போல கேட்க பிறகு வழியில்லாமல் நமச்சி மேக்னாவை தமிழ் வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.
அப்போது சரஸ்வதி மற்றும் தமிழுக்கு திருமணமான புகைப்படத்தை பார்த்து அந்த புகைப்படத்தை நமச்சி மறைத்து வைக்கிறார். பிறகு மேக்னா வீட்டில் எல்லோரிடமும் நலம் விசாரித்து சாப்பிட்டு முடிகின்றனர். அப்போது கமலா கோதையிடம் பையனை நல்லா வளர்த்து இருக்கீங்க. உங்க பையனுக்கு ஒரு நல்ல பொண்ணு இருக்கு என்று சொல்ல, அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அப்போது இவனுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சு எதற்காக மறுபடியும் கல்யாணம் பண்ணனும் என்று கோதை கேட்க, அதைக் கேட்டு மேக்னா மற்றும் கமலா இருவரும் என்ன விளையாடுறீங்களா என்று கேட்கின்றனர். அதற்கு இல்லை நிஜத்தில் தமிழுக்கு கல்யாணம் முடிந்து விட்டது. சரஸ்வதி தான் பொண்டாட்டி என்று சொல்ல அதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

கூடவே தமிழுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என நமச்சி சொன்னதை கமலா அம்மா போட்டு கொடுக்கிறார். அதோடு மேக்னா தமிழிடம் உண்மையாகவே நீங்களும் சரஸ்வதியும் ஹஸ்பண்ட் அண்ட் வைப்பா இல்ல பிராங்க் பண்றீங்களா? என்று கேட்க, நான் ஏன் பிளான் பண்ண போறேன் சரஸ்வதி தான் என்னுடைய வைஃப் சரஸ்வதி பெயர் தான் கம்பெனியில் இருக்கிறது அதோடு எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று தமிழ் பேச இதைக் கேட்டு அதிர்ச்சியான கமலா நமச்சி இடம் எதற்காக அப்போ தமிழுக்கு கல்யாணம் ஆகல என்று பொய் சொன்னா என்று அதட்டி கேட்க,, அதற்கு நமச்சி நான்தான் பொய் சொன்னேன்.. என்று பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications