1982 இல் ஓம் சக்தி படத்தில் நடித்த போது "அந்த" நடிகர் சொன்ன ஜோதிடம்.. தமிழா தமிழாவில் பகிர்ந்த நளினி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓம் சத்தி என்ற படத்தில் நடித்து கொண்டிருந்த போது நளினி நடந்த சில சம்பவங்களை அவர் தமிழா தமிழாவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

விஜய் டிவியில் நீயா நானாவை போல் ஜீ தமிழில் தமிழா தமிழா எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதை கரு பழனியப்பன் நடத்திய நிலையில் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை கடந்த சில வாரங்களாக பத்திரிகையாளர் ஆவுடையப்பன் நடத்தி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் சினிமா, சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த வாரம் ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் வெர்சஸ் சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.

Tamizha Tamizha: Actress Nalini shared her astrology related experience

அதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மாரிமுத்து, நடிகை நளினி, விஜே அர்ச்சனா, ஜானகி, சுபத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் மாரிமுத்து ஜோதிடத்திற்கு எதிராக கருத்துகளை தெரிவித்தார். தனக்கு ஜோதிடம் மீது நம்பிக்கை இல்லை என்றார். ஜோதிடம் உண்மை என்றால் கொரோனா வந்த போது ஏன் எந்த ஜோதிடரும் அலர்ட் செய்யலை.

சென்னை பெருவெள்ளம் வந்த போது ஏன் எதையும் சொல்லலை. தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலினுக்கு முதல்வராகும் யோகமே இல்லை என சொன்னீர்களே இப்போது முகத்தை எங்கே வைத்துக் கொள்வீர்கள் என சரமாரியாக கேள்விகளை கேட்டார். அதற்கு ஜோதிடர்களும் தங்கள் பதிலடிகளை கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் நடிகர் மாரிமுத்து ஆதி குணசேகரனாகவே மாறி ஜோதிடர்களை ஒருமையில் பேசியது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. இந்த நிலையில் நடிகை நளினி கூறுகையில் ஓம் சக்தி என்ற திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது நடிப்பதில் எனக்கு விருப்பமில்லாமல் இருந்தேன். ராஜராஜ சோழன் என்ற நடிகர் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது என் அம்மாவிடம் வந்து நளினி என்ன ராசி, நட்சத்திரம் என கேட்டார்.

அவர் நியூமராலஜி, நேமாலஜி, ஜாதகம் எல்லாத்தையும் பார்த்துவிட்டு சொன்னார். நீ வேண்டாம் என சொன்னாலும் உனக்கு சினிமா சாப்பாடுதான். நீ கல்யாணம் செய்துகிட்டு போனாலும் திருப்பி ஓடி வந்துடுவே. நீ ஔவையார் மாதிரி இருந்தாலும் நடிக்கணும். நீ கே.ஆர்.விஜயா மாதிரி நிறைய சாமி வேஷம் போடுவேன்னு சொன்னார். எனவே அவரை நான் நம்பித்தானே ஆக வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நடிகை நளினி தன்னுடன் நடித்த ராமராஜனை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் சில ஆண்டுகள் சுமூகமாக சென்ற மண வாழ்க்கை ஒரு கட்டத்தில் இவர்கள் பிரியும் சூழலுக்கு தள்ளியது. தற்போது வரை இருவரும் பிரிந்தே இருக்கிறார்கள். ஆனாலும் நளினிக்கு ராமராஜன் மீது காதல் அப்படியே இருப்பதாக பல தருணங்களில் தெரிவித்துள்ளார்.

இருவரும் தங்கள் மகன், மகள் திருமணத்தின் போது பாத பூஜை செய்ய ஒன்றாக நின்றனர். அது போல் சிங்கப்பூரில் இருந்து பேரன் ராமராஜனுக்கு ஒரு பாட்டை வாசித்து டெடிகேட் செய்தார். இப்படியாக இவர்களது வாழ்க்கை உள்ளது. ராமராஜன் அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். நளினி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+