வள்ளியின் வேலன்: ரஞ்சித் போட்ட சபதம்.. ரேணுகா வாங்கிய சத்தியம், வேலன் கொடுத்த பல்பு, நடந்தது என்ன?
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆனந்தி வேலனுக்கு போன் செய்து வீட்டில் பிரச்சனை என்று சொல்ல வள்ளியும் வேலனும் கிளம்பி சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வள்ளியும் வேலனும் வீட்டிற்கு வர ஆனந்தி மேலே வர சொல்ல, வேலன் அங்க எதுக்கு என்று கேட்க, இங்க தான் பிரச்சனை என்று சொல்கிறாள். பிறகு இருவரும் மேலே வர ரேணுகா ரொம்ப நேரமாக கதவை திறக்கவில்லை என்று தெரிய வருகிறது.

ரேணுகாவின் அப்பா எல்லாத்துக்கும் நீ தான் டா காரணம், நீ அவனமானப்பட்டா என் பொண்ணு சாகணுமா என்று கோபப்பட வேலனும் அவருக்கும் வாக்குவாதம் உருவாகிறது, வள்ளி வேலனை கூல் செய்து அந்த பொண்ணை வெளியே வர சொல்லு என்று சொன்னதும் வேலன் ரேணுகாவை கூப்பிட கதவை திறந்த அவள் வெளியே வந்து வேலனை ரூமுக்குள் அழைத்து செல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ரேணுகா வேலனிடம் நீ யாரையும் லவ் பண்ணல தானே என்று கேட்டு வேலனும் இல்லை என்று சொல்ல ரேணுகா யாரையும் லவ் பண்ணலன்னு சத்தியம் கேட்க வேலனும் சத்தியம் செய்கிறான். அதை தொடர்ந்து அடுத்த நாள் காலையில் ரத்தினவேல் குடும்பத்தினர் குலதெய்வ கோவிலுக்கு கிளம்புகின்றனர்.
ரஞ்சித் வேதநாயகியிடம் கோவிலுக்கு போயிட்டு வரதுக்குள்ள வள்ளியை எப்படி கரெக்ட் பண்றேன் பாரு என்று சவால் விடுகிறான். ரத்தினவேல் ஒரு காரில் ஏற ரஞ்சித் வள்ளியை தனது காரில் ஏற சொல்ல அவள் குட்டியானை வண்டியில் வேலனுடன் ஏறி செல்கிறாள்.

அடுத்து கோவிலுக்கு வந்த வேதநாயகி ஆளுக்கு ஒரு வேலையாக சொல்லி பிரித்து அனுப்ப குட்டியானை வண்டியில் வள்ளியும் வேலனும் வருவதை பார்த்து ரஞ்சித் கடுப்பாகிறான். ரத்தினவேல் வந்ததும் மாமா இந்த கோயிலில் நீங்க என்ன கேட்டாலும் குடுப்பீங்களாமே என்று எதையோ கேட்க வருகிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.












Click it and Unblock the Notifications