செந்தாமரையின் மகளா இது? கலைஞர் வீட்டில் ஒரே கருவாடு வாசம்.. ரஜினிக்கு பேர் மாற்றிய செந்தாமரை.. அடடே
சென்னை: பழம்பெரும் நடிகரும், குணச்சித்திர, வில்லன் வேடங்களில் கலக்கியவருமான செந்தாமரையின் மகள் ராஜலட்சுமி ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில் தன்னுடைய தந்தையின் குணாதிசயங்களை பற்றி சிலாகித்து கூறியிருக்கிறார்.
IndiaGlitz Tamil என்ற யூடியூப் சேனலுக்கு, செந்தாமரை மகள் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் ராஜலட்சுமி சொன்னதாவது, அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் இவர்கள் இருவருமே என் அப்பாவை, "செந்தா" என்றுதான் பாசமாக கூப்பிடுவார்கள்.. கலைஞருக்கு என் அப்பா ரொம்ப குளோஸா இருந்தாரு.. நானும் அப்பாகூட கலைஞர் வீட்டுக்கு போயிருக்கேன்.

அப்போது கலைஞர் வெறும் பனியன் போட்டுட்டு, கைலி கட்டிட்டு, உட்கார்ந்து புக் படிச்சிட்டு இருப்பார்.. அவரை சுற்றிலும் புத்தகங்கள் நிறைய இருக்கும்.. எப்பவுமே படிச்சிட்டே இருப்பாரு, எழுதிட்டே இருப்பார். கேஷூலாக இருப்பார்.. கலைஞருக்கு கருவாடு என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் வீட்டுக்கு போகும்போதெல்லாம் நிறைய முறை கருவாடு வாசனை வந்திருக்கு..
செந்தாமரை பெயர்: அவங்க வீட்டில் 2 நாய்கள் இருக்கும். இதெல்லாம் எனக்கு நிறைய ஞாபகம் இருக்கு. கலைஞரின் பேத்திக்கு, என்னுடைய அப்பா செந்தாமரையின் பெயரைதான் வைத்திருப்பார். எத்தனையோ உதவிகளை கலைஞர் செய்ய முன்வந்தார். ஆனால், என்னுடைய அப்பா அதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லிட்டார்.
என் அப்பா நேர்மையானவர். முகஸ்துதி யாரையுமே செய்ய மாட்டார்.. கூழைக்கும்பிடு இருக்காது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசிவிடுவார்.
ரஜினிகாந்த்: ரஜினி சாருக்கும், என் அப்பாவுக்கும் நல்ல நட்பு உண்டு.. அப்பா பற்றி என்னை யார் கேட்டாலும், ரஜினிகூட நடிப்பாரே? அவரா? என்றுதான் கேட்பார்கள்.. தம்பிக்கு எந்த ஊரு, மூன்று முகம் படங்களுக்கு முன்பிருந்தே அதாவது ரஜினிகாந்த் வளருவதற்கு முன்பிருந்தே இவர்கள் இருவரும் நட்பாகத்தான் இருந்திருக்காங்க..
கவிக்குயில் என்ற படத்திலும் இவர்கள் நடித்திருப்பார்கள். அந்த படத்தில் ஒரு ஓரமாக நின்றுகொண்டே இருப்பாராம் ரஜினி. அப்போது அப்பாவே அவரிடம் சென்று பேசுவாராம். யாராக இருந்தாலும் அவர்களை ஒதுக்கிவிடாமல், அரவணைத்து பேசுவது என் அப்பாவின் இயல்பு. அனைவரையும் சமமாக நடத்துபவர்..
நியூமராலஜி: நியூமராலஜி நிறைய பார்ப்பார் என் அப்பா.. ரஜினி என்று பெயரைவிட, ரஜினிகாந்த் என்று என் அப்பாதான் மாற்றினார். Rajini என்று முதலில் எழுதி கொண்டிருந்தார். பிறகு அப்பா சொல்லித்தான்,Rajni என்று மாற்றிக் கொண்டார். இதுமாதிரி சினிமாவில் நிறைய பேருக்கு பெயரை மாற்றம் செய்து தந்திருக்கிறார்" என்றெல்லாம் கூறியிருக்கிறார் செந்தாமரையின் மகள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications