என்னை காப்பாத்துனது விஜயகாந்த் தான்! வீட்டுக்கு வந்த 10 பேரு! ஒரே போனில் முடிந்த சம்பவம்! நெகிழ்ந்த நடிகர் ஷாம்
சென்னை: நடிகர் விஜயகாந்தின் மனிதநேயம் குறித்துப் பலரும் பேசியிருக்கிறார்கள். அதிலும், தனக்கு உதவி கேட்டு வந்தவர்களை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை. அப்படி, ஒரு நடிகர் தனது சம்பளப் பிரச்சனைக்காக விஜயகாந்திடம் உதவி கேட்டபோது, விஜயகாந்த் செய்த செயல், பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ஷாம் யார்
சினிமா பயணம்: நடிகர் சாம், தமிழ் சினிமாவில் ஒரு குணச்சித்திர நடிகர். ஆரம்பத்தில், துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், தனது கடின உழைப்பால் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். ஷாம், சில வருடங்களுக்கு முன்பு வெளியான வாரிசு உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஜயகாந்தின் மனிதநேயம்
ஒருமுறை, ஷாம், தனது சினிமா சம்பளப் பிரச்சனை காரணமாக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். அப்போது, அவருக்கு வேறு வழியே தெரியவில்லை. அவர் விஜயகாந்திற்கு போன் செய்து, "சார், என்னைக் காப்பாத்துங்க," என்று சொல்லி இருக்கிறார். இதைக் கேட்ட விஜயகாந்த், "ஏன் என்னாச்சு? என்ன நடந்தது?" என்று கேட்டு, ஷாம் சொன்ன கதையைக் கேட்டார்.
அதற்கு இஷாம் சம்பள பிரச்சனை காரணமாக தயாரிப்பாளர் 10 பேரை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்காரு என்று சொன்னாராம். அதற்கு விஜயகாந்த், "நீ போனை சுவிட்ச் ஆப் பண்ணி வைத்துவிட்டு வீட்டில் நிம்மதியா தூங்கு. இனிமே எந்தப் பிரச்சனையும் வராது," என்று போனை வைத்தாராம். பிறகு பிரச்சனை பண்ண ஆள் அனுப்புனவருக்கு போன் செய்து இனிமே இது ஷாம் பிரச்சனை இல்ல என்னோட பிரச்சனை என்று கொஞ்ச நேரத்தில் அந்த பிரச்சனையை முடித்து வைத்தாராம். இதுகுறித்து ஷாம் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜயகாந்த் குறித்த பிற பிரபலங்கள்
விஜயகாந்த் குறித்துப் பேசிய பல பிரபலங்கள், அவரது மனிதநேயத்தைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த், "விஜயகாந்த் ஒரு தங்கமான மனுஷன். அவருக்கு எந்தப் பிரச்சனையும் வராது," என்று கூறியிருந்தார் அதுபோல விஜயகாந்த் மறைவு வந்த பிறகு இந்த செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை விஜயகாந்த் என்றாலே கம்பீரம் அவர் இல்லை என்பதை என் மனது எப்போதுமே ஏற்றுக் கொள்ளாது என்று உருக்கமாக பேசி இருந்தார்.
விஜயகாந்த் மறைவு
அதுபோல சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களை தனக்கு மேலே பிரபலமாக்கி அழகு பார்த்தவர் விஜயகாந்த் அதற்கு உதாரணமாக நடிகர் விஜய் மற்றும் சூர்யாவை சொல்லலாம். ஆரம்பத்தில் விஜய் மற்றும் சூர்யா இருவருக்காகவும் அவர்களுடைய திரைப்படங்களில் நடித்து அவர்களை பிரபலப்படுத்துகிறது விஜயகாந்த் தான்.
விஜயகாந்த் நடிகர் ஷாமுக்கு செய்த செயல், ஒரு கலைஞனுக்குக் கிடைத்த மரியாதையாகப் பார்க்கப்படுகிறது. அவர் உடல்நலக் குறைவால் இறந்தாலும், அவரது மனம், இன்னமும் பல கலைஞர்களுக்கு ஒரு நம்பிக்கையாக இருக்கிறது என்பது உண்மை.












Click it and Unblock the Notifications