Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோபோ சங்கர் எனக்கு மாமா.. அவர் இறப்புக்கு போகாத காரணமே இதுதான்! கண் கலங்க பேசிய விமல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைச்சுவை நடிகராக இருந்து மக்கள் மனதில் தனி இடம் பிடித்த மறைந்த ரோபோ சங்கரின் இறுதி சடங்கில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்விக்கு நடிகர் விமல் அளித்த விளக்கம் தற்போது ரசிகர்களை உருக்கி வருகிறது. ஒரு சாதாரண விளக்கம் அல்ல... அந்த நாள் நடந்த சூழ்நிலையை முழுக்க மனதார பகிர்ந்ததால், அது நிகழ்ச்சியில் இருந்தவர்களையே அமைதியாக்கியதாக கூறப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற வடம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் இந்த விஷயத்தை விமல் நினைவுகூர்ந்தார். தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடித்துள்ள இந்த படத்தின் விழா வழக்கமான சினிமா பேச்சுகளோடு போய்க்கொண்டிருந்தது. ஆனால் ரோபோ சங்கர் குறித்து பேச ஆரம்பித்த தருணத்தில் மேடை முழுக்க ஒரு உணர்ச்சி நிலை உருவானது.

Vimal Robo Shankar

"ரோபோ சங்கர் மாமா மறைந்த செய்தி எனக்கு வந்தது குற்றாலத்தில் படப்பிடிப்பில் இருந்தபோதுதான்" என்று ஆரம்பித்தார் விமல். அந்தப் படப்பிடிப்பு சாதாரணம் இல்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்கள், மஞ்சுவிரட்டு காட்சிக்காக வந்த மக்கள், சிவகங்கை பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள்... இப்படி மிகப்பெரிய அளவில் சுமார் 15 லட்சம் ரூபாய் செலவில் ஒரு நாளுக்கு நடந்து கொண்டிருந்த ஷூட்டிங். அந்த சூழலில் உடனே கிளம்பி வருவது எவ்வளவு சிரமம் என்பதும் அவருக்குத் தெரியும்.

அதுபோல இருந்தாலும் மனசு ஒத்துக்கொள்ளவில்லை. "இரவில் விமானம் பிடித்து சென்னை போய், காலையில் அஞ்சலி செலுத்தி உடனே திரும்பி வந்து மதியத்திற்குள் ஷூட்டிங்கில் சேர்ந்துவிடலாம்" என்று இயக்குநரிடம் கேட்டதாக விமல் சொன்னார். ஆனால் அத்தனை பேரின் உழைப்பும், தயாரிப்பாளரின் செலவும் நினைத்தபோது ஷூட்டிங்கை நிறுத்த முடியாத நிலை. வேறு எதாவது காட்சிகளை எடுக்க முடியுமா என்று கூட கேட்டிருக்கிறார். அது கூட முடியாத சூழல்.

அந்த நொடியில் அவர் எடுத்த முடிவு தான் பலரையும் நெகிழ வைத்துள்ளது. "நான் வர முடியவில்லை... நீ போய் ஆறுதல் சொல்லு" என்று மனைவியை அனுப்பிவைத்திருக்கிறார். உடல் அங்கே இருந்தாலும் மனசு சென்னைதான் இருந்ததாக அவர் சொன்னது நிகழ்ச்சியில் இருந்தவர்களையே அமைதியாக்கியது.

ஆனால் அதற்கு அடுத்த நாள் நடந்த சம்பவம் தான் அவரை முழுவதும் உருக்கி விட்டதாக விமல் கூறினார். தயாரிப்பாளர் ராஜசேகர் அந்த கிராம மக்கள் அனைவரையும் அழைத்து, ரோபோ சங்கருக்காக பெரிய ப்ளக்ஸ் வைத்து மௌன அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல், 500 புடவைகள் தானமாக வழங்கினார். அதோடு 2000 மரக்கன்றுகளை வழங்கி நடவைத்தார். "நான் நேரில் வந்து செய்ய முடியாத அஞ்சலியை இப்படிச் செய்தது என் மனதை கவர்ந்து விட்டது" என்று விமல் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

இதே நிகழ்ச்சியில் தனது வாழ்க்கை பற்றியும் விமல் மனதார பேசினார். "எனக்கு மாஸ் ஹீரோ ஆகணும் என்ற ஆசை இல்லை. நல்ல மனசுள்ள ஹீரோவா இருந்தா போதும். நம்மை நம்பி பணம் போடுற தயாரிப்பாளர் லாபம் பார்த்தா அதுவே பெரிய விஷயம்" என்ற அவரது வார்த்தைகள் கைத்தட்டலை பெற்றது.

இமான் இசையமைத்த 'பாண்டி முனி' பாடல் மதுரை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் ஒலிக்கிறது என்று சொல்லி அவருக்கும் நன்றி தெரிவித்தார். ஹீரோயின் சனாஸ்காவின் பெயரை அழைப்பதே டாஸ்க் என்று சொன்னபோது மேடையே சிரிப்பில் மூழ்கியது. பால சரவணனுடன் மாடுகளை சமாளித்த அனுபவத்தையும் அவர் நகைச்சுவையாக பகிர்ந்தார்.

ஆனால் இந்த எல்லா பேச்சுகளையும் மிஞ்சியது ரோபோ சங்கர் குறித்து அவர் பகிர்ந்த அந்த நினைவு தான். ஒரு நடிகர் இறுதி சடங்கிற்கு வராததை வைத்து எழுந்த கேள்விக்கு, "நான் வராதது இதற்காக" என்று கூறிய அந்த நேர்மையான விளக்கம் ரசிகர்களிடையே பெரும் மரியாதையை பெற்றுள்ளது.

ரோபோ சங்கரை "மாமா" என்று அழைத்த அந்த ஒரு சொல் கூட, அவர்களுக்குள் இருந்த உறவை வெளிப்படுத்தியது. நேரில் சென்று கண்ணீர் வைக்க முடியாத வேதனை... அதற்குப் பதிலாக மனதார செய்த அஞ்சலி... அந்த நினைவுகளை பகிர்ந்த விமலின் குரலில் இருந்த உணர்ச்சி - இதனால் இந்த பேச்சு இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+