இதுதான் சித்ரா நடித்த கடைசி நிகழ்ச்சி.. பார்த்துப் பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் முல்லை கேரக்டரில் நடித்த சித்ரா கடைசியாக நடித்த நிகழ்ச்சியின் ப்ரோமோ பார்த்து அவருடைய ரசிகர்கள் இணையதளங்களில் கமெண்டுகளை பொழிந்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்றவற்றில் பரபரப்பாக சின்னத்திரை சீரியல் நடிகரானா சித்ராவின் மரணத்தைப் பற்றி தான் பேசப்பட்டு வருகிறது .
சித்ரா என்ற பெயரைச் சொன்னதுமே பலருக்கு ஞாபகம் வருவது பாண்டியன் ஸ்டோர் முல்லை கேரக்டர்தான். இருந்தாலும் அவருடைய சிரித்த முகமும் தைரியமான மோட்டிவேஷன் பேச்சும் அனைவருக்குமே ஞாபகத்திற்கு வரும் .
தற்கொலையால் வருத்தம்
இது தான் அவரை பிடிக்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைவருக்குமே பிடித்து இருந்தாலும் தற்போது அவர் இல்லை என்பதே அவருடைய ரசிகர்கள் நம்ப மறுத்து வருகின்றனர். அதுவும் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை யாரும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
உருகும் ரசிகர்கள்
அவர் எந்த சூழ்நிலையிலும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார் என்று நம்பும் ரசிகர்களின் அவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் சீரியலில் இல்லாததால் நாங்கள் பார்க்க மாட்டோம் என்று அவருக்காக உருகி வருகிறார்கள். அந்த அளவிற்கு அவர் ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் .
குறையாத ஸ்டேட்டஸ்
அவர் இறந்து ஒருவாரம் ஆன பிறகும் அவரைப் பற்றி தான் பல ரசிகர்களும் ஸ்டேட்டஸ் மற்றும் போஸ்ட் போட்டு வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் அவருக்காக 600க்கும் மேற்பட்ட பேன்ஸ் பேஸ் இருக்கின்றது .அதில் முழுக்க முழுக்க அவரை பற்றி மட்டும்தான் போஸ்ட் போட்டு வருகிறார்கள்.
இதுதான் கடைசி நிகழ்ச்சி
தற்போது விஜய் டிவியில் சித்ரா கடைசியாக இரண்டு ஷோக்களில் நடித்திருக்கிறார் .அதில் ஒரு ஷோ ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சி 20ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பப் படுகிறது .இந்த நிகழ்ச்சிக்கான புரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்தப் பிரமோவை பார்த்து பல ரசிகர்களும் கவலையோடு கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.
குவியும் ஆதரவு
அதுமட்டுமல்லாமல் சித்ராவின் ரசிகர்கள் அவர்களுடைய ஃபேன்ஸ் பேஜ்களில் புரோமோ தான் அனைவரும் போட்டு வருகிறார்கள். சித்ராவுக்கு எப்போதுமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .இவர் சீரியலில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பே தொகுப்பாளராகவும் கலக்கியிருக்கிறார்.
ரசிகர்கள் கூட்டம்
அதுமட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோக்களில் டான்ஸ் ஆடியும் ரசிகர்களை கவர்ந்தவர் என்பதால் அனைவருக்குமே இவர் பரிச்சயமான நபர்தான். ஆனால் எல்லாத்தையும் விடவும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் கூடியது இவருக்கும் உள்ள கேரக்டரில் தான்.
முல்லை இல்லாத வாழ்க்கை
பாண்டியன் ஸ்டோர் கதிர் முல்லை தான் பெரும் ரசிகர்கள் இருக்கின்றார்கள் .இந்த சீரியலில் நடித்து தான் இவர் இந்த அளவிற்கு பிரபலம் ஆனார் .ஆனால் இந்த சீரியலில் நடித்தால் கடைசியாக இவர் உயிரையும் விட்டுவிட்டார் என்று கேள்விப்படும்போது தான் ரசிகர்கள் பெரும் துயரத்தில் இருக்கின்றனர்.