என்ன ஐஸ்வர்யா.. ஆடி மாசம் ஜாலியா இருந்தியான்னு கேட்டாங்க.. இதுக்கு என்ன பதில் சொல்றது.. விஜே வேதனை
சென்னை: என்ன ஒரு மாசம் ஜாலியா இருந்தியான்னு கேட்டாங்க .இதற்கு என்ன பதில் சொல்றது என சங்கடத்தில் வேதனை அடைந்ததாக விஜே ஐஸ்வர்யா தெரிவித்தார்.
பிரபல தொலைக்காட்சியில் விஜே பணியில் பல ஆண்டுகளாக பணியாற்றிய விஜே ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் கலந்து விட்டார். அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விஜேவாக இருந்த போது நிறைய பேசிக் கொண்டிருந்தேன்.

தற்போது திருமணமாகி இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்துவிட்டதால் 2 ஆண்டுகளாக பேசாமல் வீட்டில் இருக்கிறேன். என் பசங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஆரம்பத்தில் கலகலவென பேசிவிட்டு அமைதியாக இருந்தது மன உளைச்சலாக இருந்தது.
ஆனால் இப்போது தேற்றிக் கொண்டுவிட்டேன். விஜே அர்ச்சனா அக்காவை பார்த்துதான் நான் விஜே ஆக வேண்டும் என இந்த பணிக்கு வந்தேன். இப்ப இருக்கும் விஜேக்களுக்கும் அர்ச்சனா அக்காவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. விஜே அர்ச்சனா அக்கா ரொம்ப சிம்பிளா இருப்பாங்க. இப்போ இருக்கும் விஜேக்கள் கொஞ்சம் ஆட்டிடியூட் காட்டுகிறார்கள்.
நான் பார்த்தவரை அப்படிதான் இருக்கிறது. பொதுவாகவே பெண்கள் என்றால் ஓவரா பண்ணுவாங்க, அதிலும் மீடியா பெண்கள் என்றால் கேட்கவே வேண்டும் என சிலர் நினைப்பார்கள். உண்மையில் மீடியாவில் இருக்கும் எல்லா பெண்களும் அப்படியில்லை. ஆண் விஜேக்கள் மாதிரி பெண் விஜேக்கள் நீண்ட காலம் தாக்குப் பிடிப்பதில்லை.
இதற்கு காரணமே கல்யாணம் ஆகிவிட்டால் பெண் வீடியோ ஜாக்கிகள் வேண்டாம் என கருதுகிறார்கள். எத்தனை பேர் கல்யாணம் ஆகி விஜேக்களாக இருக்கிறார்கள் என்பதை பாருங்கள். அவர்களுக்கு தேவை அவுட்புட்தானே. அதில் கல்யாணம் ஆனவர்களாக இருந்தால் என்ன ஆகாதவர்களாக இருந்தால் என்ன
நான் பணியாற்றிய காலத்தில் இருந்த ஒரு விஜே கூட இப்போது பணியில் இல்லை. இதுக்கு மேல அசிங்கப்பட எதுவுமே இல்லை என்பதால்தான் நான் வெளியே வந்தேன். ஒரு சின்ன மேடைக்கு போனால் கூட முகத்தை பார்க்கிறார்கள். திறமையை பார்ப்பதே இல்லை. ஆணும் பெண்ணும் சமம் என்கிறார். ஆனால் அது போல் பார்ப்பதில்லையே.
எந்த இடத்திற்கு போனாலும் அதிலும் குறிப்பாக மீடியா துறையில் ஆண், பெண் பாரபட்சம் இருக்கிறது. நேரலையில் சில கேள்விகள் சங்கடப்படும்படியாக இருக்கும். எனக்கு திருமணமாகி சில நாட்கள் கழித்து நிகழ்ச்சிக்கு வந்தேன். எனக்கு வழக்கமாக போன் செய்யும் ஒருவர் என்ன மேடம் ரொம்ப நாளா ஜாலியா இருந்தீங்களா என கேட்டார்.
அவரின் கேள்விக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நானும் அவரை சமாளித்துக் கொண்டே நிற்கிறேன். அவர் விடுவதாக இல்லை. இதற்கெல்லாம் நான் எப்படி பதில் சொல்ல முடியும். இவருக்கு பதில் சொல்லிவிட்டு எப்படி என் குடும்பத்தை எப்படி பார்ப்பேன். இப்படி பல சங்கடங்கள் இருக்கும் என ஐஸ்வர்யா தெரிவித்தார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications