Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மலர் மனசுக்குள்ள எதுக்கு இத்தனை குழப்பம்... லவ்வாம்... லவ் இல்லையாம்...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் கிரைம் ஸ்டோரி மாதிரியும், நார்மல் ஸ்டோரி மாதிரியும் இருக்கு.

மலருக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை கதிர் உதவி கமிஷனர். அவனின் அப்பாவோ ராணுவ அதிகாரி பதவியிலிருந்து ஒய்வு பெற்றவர்.

மலருக்குள் ஏதோ மர்மம் இருக்கு.இதனாலேயே மலருக்கு போலீஸ் மாப்பிள்ளை என்றதும் பயம் வருது.

மலர் கதிர்

மலர் கதிர்

கதிர் மேல் ரொம்ப லவ் வச்சிருக்கான். பெரியவர்கள் பார்த்து நிச்சயம் பண்ணின கல்யாணம் என்றாலும் காதல் வராதா என்கிற ஏக்கத்தில் கதிர் என்னென்னவோ செய்து பார்க்கிறான். அப்போதும் ஐ லவ் யூன்னு மட்டும் சொல்ல மாட்டேன்னு அடம் பிடிக்கறா மலர்.

காப்பாத்தியும்

காப்பாத்தியும்

மலரை அவளின் தாய் மாமன் மகன் கடத்தி, கல்யாணம் செய்துக்கப் போன கோயிலுக்கு கதிர் சென்று அவளை காப்பாத்தி அழைச்சுட்டு வர்றான். அப்போ கதிர் மேல கொஞ்சம் ஆசை வருது.

அப்பா மலர்

அப்பா மலர்

மலரின் அப்பாவை அவளின் தாய் மாமன் ஆட்கள் வச்சு அடிச்சு போட்டுடறாங்க அவரையும் கதிர் குடும்பம் காப்பாத்தி வீட்டுக்கு அனுப்பி வைக்கறாங்க. மலரையும், அவள் தங்கச்சி சுவாதியையும் பாதுகாப்புக்கு என்று கதிர் வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றாங்க கதிர் குடும்பத்தார்.

படுக்கையறை

படுக்கையறை

படுக்கை அறையை மலரின் டெஸ்ட்டுக்கு தகுந்த மாதிரி தயார் செய்து வச்சிருக்கான் கதிர். இதெல்லாம் பார்க்க பார்க்க அவளுக்கு கதிர் மேல லவ் வருது. அறையில் இருந்த அவனின் போட்டோவை எடுத்து மார்போட அணைச்சுக்கறா.

சொல்லிடுக்கா

சொல்லிடுக்கா

அக்கா மாமா மேல உனக்கு லவ் வந்திருச்சுதானேன்னு சுவாதி கேட்க.. ஆமாம்னு சொல்றா மலர்.அப்போ பாவம் அவர்கிட்ட இப்போவாச்சும் லவ்வை சொல்லிருக்கான்னு சொல்றா.

வெளியில போயி

வெளியில போயி

சரி வெளியில அழைச்சுட்டு போயி சொல்றேன்னு சொல்லிட்டு வெளியில போறாங்க.அங்கே ஒரு கேஸ் புருஷனை மனைவி கொன்ன கேஸ்..இதைப் பார்த்து பயந்துடறா மலர்.கடைசியில் ஐ யூ சொல்லவும் இல்லை

மர்மம் மலருக்குள்

மர்மம் மலருக்குள்

மலருக்குள் இருக்கும் ஏதோ ஒரு மர்மம் அவளை எப்போதும் நிலை குலைய வச்சு பயமுறுத்திக்கிட்டே இருக்குது. அதுவும் வரும் கால கணவன் உதவி ஆணையர் எனும்போது பயமும் அதிகரிக்குது.மனதிலிருக்குமாசையையும் வெளிப்படுத்த முடியலை.

மனசுக்குள் கதிர்

மனசுக்குள் கதிர்

எத்தனை தடவை இப்படி நம்மை ஏமாத்தறாளேன்னு வெறுப்பாயிடறான் கதிர். கல்யாணம்தான் நிச்சயமாயிருச்சே...காதல் வந்தா என்ன,வராமல் போனா என்னன்னு .மலர் போல கதிரால் அசால்ட்டா இருக்க முடியலை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+