Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Eeramana Rojave: ஐயோ மலர்.. .இதுக்கா இம்புட்டு அழுகாச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரமான ரோஜாவே சீரியலில் வெற்றி முதல் காதலை தன்னிடம் மறைச்சுட்டான்னு அவனின் பொண்டாட்டி மலர் குமுறி குமுறி அழுகிறாள்.

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் மலர் வெற்றி இருவருக்கும் எதிர்பாராத விதமாத்தான் கல்யாணம் நடக்குது.

ஒரு வருஷமாகியும் தம்பதிகள் நெருக்கமாகாத நிலையில், வெற்றியின் முதல் காதலை அவனது காதலியே மலரிடம் சொல்லிவிட அப்போதுதான் மலர் குமுறி அழுகிறாள்.

பொய் சொல்லிட்டாரே

பொய் சொல்லிட்டாரே

ஏற்காடு போயி பெஸ்ட் ஜோடின்னு கோப்பை எல்லாம் வாங்கிட்டு வந்தோம். எதுவும் தன்னிடம் மாமா மறைச்சதில்லைன்னு வேற சொன்னார். இப்போ என்னடான்னா படிக்கும் போது வெற்றி தன்னை காதலிச்சதா ஒருத்தி வந்து சொல்றா..நம்ம அத்தையும் அவளை மருமகளே மருமகளேன்னு கூப்பிடறாங்கன்னு நினைச்சு நினைச்சு அழறா.

 வெற்றியின் அண்ணனை

வெற்றியின் அண்ணனை

இவளே ரெண்டாவது காதல்தான்..வெற்றியின் அண்ணணனை காதலிச்சு கல்யாண மேடை வரை வந்து மாப்பிள்ளைக்கு லாரி விபத்து ஏற்பட்டதால்தான் அவனின் தம்பியான வெற்றியுடன் இவளுக்கு கல்யாணம் நடக்குது. இதை நினைச்சு அதை மறந்து விடலாமே மலர்.

யாரையாவது காதலிச்சீங்களா?

யாரையாவது காதலிச்சீங்களா?

மாமா படிக்கும்போது யரையயாவது காதலிச்சு இருக்கீங்களான்னு நாம் அன்னிக்கு ஏற்காட்டில் கூட மாமாகிட்டே கேட்டோம்.. மாமா இல்லேன்னுதானே சொன்னார்னு மறுபடியும் அழறா. போதாக் குறைக்கு இவளை வெறுப்பேத்த மாமியாரும், நாத்தனாரும் இவள் காது படவே வெற்றி படிக்கும்போதே நிறைய பெண்கள் இவனை சுத்தி வரும்.

பஞ்சாயத்து கூடும்

பஞ்சாயத்து கூடும்

பெண்ணைப் பெத்தவங்க வீட்டுக்கு வந்து சண்டை போட்டு அப்படினு இப்படின்னு எதாவது ஏழரையை இழுத்து விட்டுக்கிட்டே இருப்பான்னு பொய்யா பேசறாங்க..வேணுக்கும்னே..மலர் இதைக் கேட்டு இன்னும் குமுறி குமுறி அழறா. ஒரு வருஷமா அவனது நடவடிக்கையைப் பார்த்துக்கிட்டு இருந்தவளுக்கு, அதுவும் படிச்ச பொண்ணுக்கு தனக்குத் தானே ஒருத்தரைப்பத்தி ஜட்ஜ் பண்ண தெரியாதா?

ஆசை ஆசையாய்

ஆசை ஆசையாய்

வெற்றி அம்மா போட்டு உடைத்துவிட்ட சிறந்த ஜோடிக்கான கோப்பையை சரி செய்து மலரிடம் காண்பிக்க ஆசை ஆசையாய் வருகிறான்.அவளோ சோர்த்து படுத்து கிடக்கா. அவன் பதறிப் போயி ஏன் மலர் ஏதோ நடந்து இருக்கு என்னன்னு சொல்லு மலர்னா எதுவும் இல்லைங்கன்னு மறைக்கறா.

காதைத் திருகி

காதைத் திருகி

அதான் உன் புருஷன்னு ஆகிப்போச்சு இல்லே.. அவன் என்ன அரிச்சந்திரனா பொய்யே சொல்லாம வாழறதுக்கு? காதைத் திருகி ஏண்டா ராஸ்கல் பொய் சொன்னேன்னு கேட்கறதுதான் இந்த காலத்து பொண்ணுக்கு அழகு. அதைவிட்டு இப்படி ஒரு அழுகாச்சியா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+