நிலாவும்... சந்திராவும்... ஸ்வேதாவின் கோவம் இதுக்குத்தானா... கடவுளே...!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலா காதலன் அசோக்கோட சேர்ந்து, தன் அப்பா அம்மாவைத் தேடி ஹைதராபாத் போயிருக்கா.
சந்திரலேகா சீரியலின் சந்திரா கடந்த திங்கள் முதல் புதன் வரை நிலா சீரியலிலும் ஸ்வேதாவை காப்பாத்தற ரோலில் வந்திருந்தார்.
சஞ்சய் ஸ்வேதாவை அடைய நினைச்சு ஜூஸில் மயக்க மருந்து கலந்து குடுத்துடறான். இவன்கிட்டே இருந்து நிலாவும்,சந்திராவும்தான் ஸ்வேதாவை காப்பாத்தறாங்க.
கோயில் நிலத்தை விற்கலாமா .. சத்தியம் வாங்கிகிட்டாங்க ஈஸ்வரி அம்மா!
ஸ்வேதா கோபம்
சஞ்சய் போன் பண்றான்.. ஸ்வேதா கட் பண்ணிடறா... என்ன இவளுக்கு கோவம்.. ஒரு வேளை சந்திராவும், நிலாவும் சொல்லி ஸ்வேதா மனசை மாத்திட்டங்களோன்னு யோசிக்கறான்.
அப்படிப்பட்ட பீஸ் இல்லையே
இதுக்கெல்லாம் யோசிச்சு நம்ம போனை கட் பண்ற பீஸ் இல்லையே...என்கிட்டே பேச ஸ்வேதா அலைவாளே... இன்னிக்கு என்னாச்சுன்னு நினைக்கறான் சஞ்சய்.
வீட்டுக்கு
கீழே அம்மாவும், மாமாவும் பேசிக்கிட்டே சாப்டுகிட்டு இருக்காங்க. சஞ்சய் சுவரேறி திருட்டுத் தனமா ஸ்வேதா ரூமுக்கு போறான். என்ன உனக்கு கோவம்னு கேட்கறான்.
உனக்கு உரிமை
நான் உனக்கானவ சஞ்சய்... உனக்கு என் மேல எல்லா உரிமையும் இருக்கு.நீயா கூப்பிட்டு இருந்தா கூட நான் வந்திருப்பேன்.எதுக்கு மயக்க மருந்தெல்லாம் குடுத்தே... இப்போ பாரு சந்திராவும், நிலாவும் உன்னை அசிங்கப் படுத்திட்டாங்கன்னு சொல்றா.
பொண்ணுங்க ஏமாந்துட
இதுதானா உன்னோட கோவம்.. உன்னை அடைஞ்சுட்டா ஊருக்கு கிளம்பிருவேன்னு சொல்லிக்கறான் சஞ்சய். ஸ்வேதா மாதிரி பொண்ணுங்க ஏமாந்துட கூடாது எந்த சமயத்திலும்...