Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்லவன் மாதிரி நடிக்காத! யோகி பாபுவை அவமானப்படுத்திய vj பாவனா! ரவி மோகன் ஸ்டுடியோ விழாவில் நடந்த சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ரவி மோகன் தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி வைக்கும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய வி.ஜே. பாவனா, யோகி பாபுவிடம் கேட்ட ஒரு கேள்வி, சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Yogi Babu Ravi Mohan VJ Bhavana

ரவி மோகனின் புதிய முயற்சி

சினிமாவில் ஒரு நடிகராகப் பயணித்து வரும் ரவி மோகன், தற்போது தயாரிப்புத் துறையிலும் கால் பதித்துள்ளார். இவரது தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், யோகி பாபுவுடன் இணைந்து ஒரு புதிய படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், யோகி பாபு இந்த விழாவின் முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அவமரியாதையாகப் பேசிய பாவனா

விழாவில், தொகுப்பாளினி பாவனா, அங்கிருந்த பிரபலங்களிடம் 'உங்களுடைய மைண்ட் வாய்ஸ் என்ன?' என்ற ஒரு விளையாட்டை நடத்தினார். பல பிரபலங்களும் தங்கள் மனதில் தோன்றிய நகைச்சுவையான மற்றும் எதார்த்தமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, யோகி பாபுவிடம் மைக் நீட்டப்பட்டது. அதற்கு, "நம்மை வைத்துப் படம் எடுக்கும் ரவி மோகன் சார் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்" என்று யோகி பாபு மிகவும் நேர்மையாகப் பேசினார்.

யோகி பாபு பதிலடி

ஆனால், பாவனா உடனடியாக, "நீங்கள் ரொம்ப நல்லவர் மாதிரி பேசாதீங்க! உண்மையில் மனதில் என்ன நினைத்தீர்களோ அதைச் சொல்லுங்கள்" என்று மிகவும் அலட்சியமான தொனியில் கூறினார்.

பாவனாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், யோகி பாபு ஒரு நிமிடம் முகம் அசந்து போய், வருத்தத்துடன் காணப்பட்டார். பின்னர், தன்னைச் சுதாரித்துக் கொண்டு, "நான் உண்மையாகவே இதைத்தான் நினைத்தேன். உன்னுடைய மனதில் நினைத்ததை எல்லாம் நான் நினைக்கவில்லை" என்று பாவனாவிற்குப் பதிலடி கொடுத்தார்.

அதைக் கேட்டதும், பாவனா, "அப்படி நினைத்திருந்தால் சந்தோஷம், என்று சொன்னதும் நான் எப்போதும் அப்படித்தான் நினைக்கிறேன் உன்ன மாதிரியா? நீ உன் பக்கத்தில் நான் பின்னாடி நிற்கும்போது இவரை உள்ள விடாதீங்க, அவருக்கு சேர் கொடுக்காதுங்க என்று சொன்னதெல்லாம் எனக்கு தெரியும் என்று சொன்னதும் அதை கேட்டு விஜே பாவனா ஒரு நிமிடம் மௌனமாகி விடுகிறார். பிறகு அப்படியா சந்தோசம் என்று சமாளிக்க, அதை சிரிச்ச முகமாக சொல்லுமா? எதுக்கு இப்படி சண்டைக்கு போற மாதிரி முகத்தை வச்சிட்டு பேசுற? என்று யோகி பாாபு கேட்டதும், சிரித்துக்கொண்டே "மைக்கைக் கொடுங்கள்" என்று வாங்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் விஜே பாவனா.

கலைஞனின் வலி

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலர் வி.ஜே. பாவனாவின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளரின் பணி, மேடைக்கு வரும் கலைஞர்களை மரியாதையுடன் நடத்துவதுதான். வெறும் கைதட்டலுக்காகவும், சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காகவும், ஒரு கலைஞனை பொதுவெளியில் அவமதிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

ஒரு கலைஞன், தனது திறமையாலும், கடின உழைப்பாலும் பொதுமக்களின் மனதில் ஒரு இடத்தை பிடித்திருக்கலாம். ஆனால், ஒரு சில விநாடி அவமானமும், மரியாதைக் குறைவான பேச்சும் அவர்களின் மனதை எவ்வளவு காயப்படுத்தும் என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை. யோகி பாபுவின் முகம் ஒரு கணம் வாடிப் போனது, அவர் அடைந்த மனவலியை நமக்கு உணர்த்துகிறது. இது ஒரு கலைஞன் தனது வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டிய சுமையாக மாறிவிடும்.

ரவி மோகன் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் படமானது, ஒரு நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் இணைந்து இந்தப் படத்தின் வெற்றிக்கு உழைக்கவிருக்கும் நேரத்தில், நடந்த இந்தச் சம்பவம் வருந்தத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+