எதிர்நீச்சலுக்கு போட்டியாக ஜீ தமிழில் தொடங்கப்படும் புது சீரியல்.. அதுவும் இவங்களும் இருக்கிறாங்களே!
சென்னை: முன்னணி தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான ஜீ தமிழ், "சின்னஞ்சிறு கிளியே" என்ற புதிய குடும்பத் தொடரை ஜூலை 21 முதல் ஒளிபரப்ப உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு இந்தத் தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும்.
இந்தத் தொடரின் மையக் கதை, இந்து (ஸ்வாதிகா) என்ற பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. பல்வேறு வேலைகள் செய்து தன் குடும்பத்தை அவள் காப்பாற்றுகிறாள். பைக் டாக்ஸி ஓட்டுதல், உணவு விநியோகம், டியூஷன் எடுப்பது எனப் பல வேலைகள் செய்து குடும்பத்தின் நிதிச்சுமையைத் தாங்குகிறாள்.

சின்னஞ்சிறு கிளியே சீரியல்
கந்துவட்டி தொழில் செய்யும் கிருபாகரன் (ரௌத்திரம் சையத்), பெண்கள் அடங்கி நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பெண்களிடம் பணம் போனால் குடும்பம் நாசமாகிவிடும் என்று நம்புகிறார். கிருபாகரனின் விசுவாசியான கர்ணாவுக்கும் (நரேஷ்) இந்துவுக்கும் நடக்கும் சந்திப்பு மோதலில் முடிகிறது.
சூழல் காரணமாக, கர்ணாவுக்கும் இந்துவுக்கும் திருமணம் நடக்கிறது. இந்து கிருபாகரன் வீட்டிற்கு வாழ வருகிறாள். இதுவரை சுதந்திரமாக சுற்றி வந்த இந்துவின் வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது? அவள் சிறகு உடைந்த பறவையாக சிறைக்குள் தவிப்பாளா அல்லது சிறையை உடைத்து விண்ணை நோக்கிப் பறப்பாளா என்பதே தொடரின் கதை.
எதிர்நீச்சல் சீரியல்
இந்தத் தொடரில் மதுமிதா, அபிதா, ஆறுமுக வேலு, காயத்ரி உட்படப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். "சின்னஞ்சிறு கிளியே" சீரியல் இன்று ஜூலை 21 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஜீதமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலின் கதையைக் பார்க்கும் போது ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கதையைப் போல இருப்பதாக பலர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

சீரியலின் ப்ரோமோ
சின்னஞ்சிறு கிளியே சீரியலின் ப்ரோமோவை பார்க்கும்போது இதுபோல இப்போதும் நடக்கிறதா? என்று சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக பெண்கள் வரதட்சணை கொடுமையால் அவதிப்படுவது மற்றும் பெண்கள் என்றால் வீட்டில் அடிமையாக இருக்க வேண்டும் என்று ஒரு மனநிலை இருப்பதை சில சம்பவங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதுபோல இந்த சீரியல் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை வெளிக்காட்டி பலருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications