ஷாக்கிங்... ஓடும் ரயிலில் பெண்ணுக்கு தீ வைப்பு.. குழந்தை உட்பட 3 பேர் கருகிய சோகம்.. கேரளாவில் பரபர
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்ததில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
Recommended Video
கேரளாவின் ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்துக்கொண்டிருந்தது. சரியாக இரவு 9.45 மணியளவில் ரயில் கோழிக்கோடு ரயில் நிலையத்தை கடந்து கோராபுழா ரயில்வே பாலத்தில் சென்றக்கொண்டிருக்கையில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் போன்ற திரவத்தை பெண் பயணி மீது ஊற்றியிருக்கிறார். பின்னர் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனால் அந்த பெட்டி முழுவதும் அலறல் சத்தம் கேட்டது.

சக பயணிகள் உஷாராவதற்குள் தீ மளமளவென பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து அபாய சங்கிலி இழுக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் ரயிலில் காயமடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தீப்பற்றி எரிந்த பெண்மணியை மட்டும் காணவில்லை. இதனையடுத்து ரயில்வே போலீசார் தண்டவாளங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.
அதாவது ரயில் தண்டவாளத்தில் அப்பெண்ணுடன் சேர்த்து மேலும் 2 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதாவது ஒரு குழந்தை மற்றும் ஒரு ஆணின் சடலம் என மொத்தம் 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மூன்று பேர் மீதும் பலத்த தீ காயங்கள் இருந்துள்ளன. இதனையடுத்து மூன்று பேரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், "முதலில் பெண் மீது மர்ம நபர் தீ வைத்திருக்கிறார். அப்பெண் தன்னுடன் குழந்தை ஒன்றையும் வைத்திருந்திருக்கிறார். எனவே தீ அவர் மீதும் பரவியிருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க அவர்கள் இருவரும் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்துள்ளனர்.
அதேபோல, இவர்களுக்கு பக்கத்தில் இருந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க ஆண் மீதும் தீ பரவியதால் அவரும் ரயிலிலிருந்து கீழே குதித்திருக்கிறார். எனவே மூவரும் பலத்த அடிப்பட்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைக்கு, அப்பெண் அத்தை என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறதா? என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். மர்ம நபர் குறித்து ரயில் நிலையங்களிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளி பிடிபடுவார்" என்று காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 9 பேர் தற்போது கோழிக்கோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓடும் ரயிலில் பெண்ணுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி












Click it and Unblock the Notifications