"தகதக".. கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்.. தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகள்! பதைபதைத்த மக்கள் - ஏன்?
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் திடீரென நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தின் 3 வது நடைமேடையில் ஆலப்புழா - கண்ணூர் இடையிலான எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு 1:25 மணியளவில் இந்த ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இந்த பயங்கர தீ விபத்தில் ரயிலின் 3 பெட்டிகள் எரிந்து நாசமாகின. ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவிய பின்புறம் இருந்த 3 பெட்டிகள் தீ பற்றி எரிந்தன. இதனை கண்ட பொதுமக்களும் ரயில்வே ஊழியர்கள் பதற்றமடைந்து தீயணைப்பு துறையினருக்கும் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 3 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு படையினர் மணிக்கணக்கில் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில் 3 ரயில் பெட்டிகளும் முற்றிலுமாக தீயில் கருகின. இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் மற்றும் கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தீ வைப்பு சம்பவமாக இருக்கக்கூடும் என்று ரயில்வே அதிகாரிகள் சந்தேகித்து உள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், "யாரோ ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். 3 தீயணைப்பு குழுக்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினார்கள். பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது.

இருப்பினும் 3 ரயில் பெட்டிகளும் முழுவதுமாக தீயில் கருகி நாசமாகின. இந்த தீ விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்புகளும் பதிவாகவில்லை." என்றார். கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி கோழிக்கோடு மாவட்டம் ஏலத்தூரில் இதே ரயிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரயிலில் பயணிக்கும்போது தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
எரிபொருள் ஊற்றி 3 பேர் எரிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 9 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியை சேர்ந்த ஷாருக் சைபி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், இந்த ரயில் தீ விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications