"தகதக".. கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்.. தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகள்! பதைபதைத்த மக்கள் - ஏன்?
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் திடீரென நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தின் 3 வது நடைமேடையில் ஆலப்புழா - கண்ணூர் இடையிலான எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு 1:25 மணியளவில் இந்த ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இந்த பயங்கர தீ விபத்தில் ரயிலின் 3 பெட்டிகள் எரிந்து நாசமாகின. ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவிய பின்புறம் இருந்த 3 பெட்டிகள் தீ பற்றி எரிந்தன. இதனை கண்ட பொதுமக்களும் ரயில்வே ஊழியர்கள் பதற்றமடைந்து தீயணைப்பு துறையினருக்கும் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 3 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு படையினர் மணிக்கணக்கில் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில் 3 ரயில் பெட்டிகளும் முற்றிலுமாக தீயில் கருகின. இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் மற்றும் கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தீ வைப்பு சம்பவமாக இருக்கக்கூடும் என்று ரயில்வே அதிகாரிகள் சந்தேகித்து உள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், "யாரோ ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். 3 தீயணைப்பு குழுக்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினார்கள். பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது.

இருப்பினும் 3 ரயில் பெட்டிகளும் முழுவதுமாக தீயில் கருகி நாசமாகின. இந்த தீ விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்புகளும் பதிவாகவில்லை." என்றார். கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி கோழிக்கோடு மாவட்டம் ஏலத்தூரில் இதே ரயிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரயிலில் பயணிக்கும்போது தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
எரிபொருள் ஊற்றி 3 பேர் எரிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 9 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியை சேர்ந்த ஷாருக் சைபி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், இந்த ரயில் தீ விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
B28 புல்லட் ரயில்.. சென்னை டூ மதுரை 2 மணி நேரம்தான்... இந்தியாவின் புதிய 'அரசன்'.. முழு விவரம் -
தமிழ் புத்தாண்டு.. திருநெல்வேலி, தூத்துக்குடி செல்வோருக்கு நல்ல செய்தி.. தெற்கு ரயில்வே அறிவிப்பு -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை












Click it and Unblock the Notifications