மூணாறு.. சோறு தண்ணி இல்லாமல் 5 நாளாக எஜமானரை தேடும் நாய்.. ஒவ்வொரு உடலையும் பார்த்து ஏமாறும் சோகம்
இடுக்கி: மூணாறு ராஜமலை நிலச்சரிவு மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் ஒரு நாய் தனது எஜமானரை மூன்று நாள்களாக தேடி வருகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நல்ல மழை பொழிவை கொடுத்து வருகிறது. கேரளாவின் இடுக்கி, ஆலப்புழா, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் இருந்த நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடவுளின் தேசம் தண்ணீரில் மிதக்கிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மூணாறு பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் மூணாறை அடுத்த ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அங்கு தங்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தேயிலை தொழிலாளர்களின் வீடுகள் அப்படியே அமுங்கின.

ராஜமலை பகுதி
இந்த நிலச்சரிவில் 80-க்கும் மேற்பட்டோர் புதைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதிலிருந்து 50 பேரின் உடல்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளன. ஆயினும் மழை காரணமாக அவ்வப்போது தொய்வு ஏற்படுவதால் இன்று 5-ஆவது நாட்களாக மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. தங்கள் உறவினர்களை தேடி தமிழகத்தின் கயத்தாறு, கோவில்பட்டி பகுதி மக்கள் ராஜமலை பகுதியில் கண்களில் குளம் போன்ற கண்ணீருடன் குவிந்துள்ளார்கள்.

தேடி வரும் நாய்
எங்காவது நம் உறவினர் உயிருடன் இருக்கமாட்டாரா என்ற ஏக்கமும் அவர்கள் கண்களில் தெரிகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த 5 தினங்களாக ஒரு நாய் தனது எஜமானரை தேடி சுற்றி சுற்றி வருகிறது. ஒவ்வொரு உடலையும் மீட்பு படையினர் மீட்கும் போது அது நம்மை வளர்த்த எஜமானரா, நமக்கு உப்பிட்டவரா என ஓடி போய் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறது.

அலசும் நாய்
இந்த நாயை வளர்த்த தொழிலாளியின் குடும்பமே மண்ணுக்குள் புதைந்துவிட்டது. பேரிடரில் இருந்து தப்பித்த இந்த நாய் தன்னுடைய எஜமானர் இந்த மண்ணின் கீழ் எங்காவது இருக்கிறாரா என்று கண்டுபிடிக்க முழு பேரழிவு பகுதியையும் அலசி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, இந்த நாய் எல்லோரையும் போலவே தன்னை வளர்த்தவர்கள் உடலைக் காண்பதற்காக அங்கேயே இருந்து வருகிறது.

நாயின் பாசமும் பரிதவிப்பும்
இதை பார்க்கும் மீட்பு படையினர் நாயின் பாசத்தை பார்த்து மெய்சிலிர்த்து போயினர். ஒவ்வொரு உடலை எடுக்கும் போது இந்த நாய் ஓடி வந்து பார்ப்பது அங்கிருப்போர் கண்களை குளமாக்கி வருகிறது. அதன் பாசமும் பரிதவிப்பும் மீட்பு படையினரை கரைய வைக்கிறது. மேலும் உணவில்லாமல் தவித்து வரும் இந்த நாய்க்கு அங்கிருக்கும் மக்களும் மீட்பு படையினரும் உணவு கொடுத்தால் அதை சாப்பிடுவதில் சிறிதும் ஆர்வம் காட்டாமல் தனது எஜமானரை தேடி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications