தலைக்கு தில்லு பார்த்தீங்களா.. கேரள போலீசிடமே பணம் கேட்டு, வசமாக சிக்கிய விழுப்புரம் திருடன்!
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள துணிக் கடையில் கொள்ளையடித்துவிட்டு செல்லும் வழியில் ஒரு திருடன், போலீசிடமே ஊருக்கு செல்ல பணம் கேட்டு அப்பட்டமாக சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 3.30 மணியளவில் அவர்கள் கண்ணில் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு நபர் சிக்கியுள்ளார். உடனடியாக அவரை பின்தொடர்ந்து சென்று பேசியுள்ளனர். தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்கிற அந்த நபர் இடுக்கி மாவட்டம், தொடுப்புழாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்ததாகவும், வேலை பிடிக்கவில்லை என்பதால் மீண்டும் தமிழ்நாடு செல்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு உடல்நலம் சரியில்லை என்றும், ஊருக்கு செல்ல பேருந்துக் கட்டணத்துக்கு பணம் வேண்டும் என போலீசிடம் கேட்டுள்ளார். போலீசார் அவரை மேலும், கீழும் நோட்டமிட்டபோது சட்டைப் பையில் பணம் கட்டு கட்டாக இருந்தது அப்பட்டமாக தெரிந்துள்ளது. சட்டைப் பையிலேயே ரூ.6,000 வைத்திருந்ததால், சந்தேகப்பட்டு அவரை சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அண்டர்வியரில் பதுக்கி வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
அதற்கு ராதாகிருஷ்ணன், "சார்.. இது ஹோட்டல் வேலையில் நான் சம்பாதித்து சேமித்து வைத்தத் தொகை." என்றதும் போலீசாருக்கு குபீர் சிரிப்பு வந்துவிட்டது. "அப்படியா.. சரி நீ எந்தக் கடையில் வேலை பார்க்கிறாய் சொல்." என்று கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர். ராதாகிருஷ்ணன் ஊருக்கு புதியவர் என்பதால்,பதில் சொல்ல முடியாமல் திணறியுள்ளார். ஒருகட்டத்தில் அவர், "ஆமா சார் ஒரு துணிக்கடையில் இருந்துதான் இந்தப் பணத்தை கொள்ளையடித்தேன்." என ஒப்புக் கொண்டார்.
ஆனாலும் கொள்ளையடித்த கடையின் பெயர் கூட ராதாகிருஷ்ணனுக்கு தெரியவில்லை. பிறகு போலீஸ் விசாரணையில் தொடுப்புழாவில் உள்ள ஒரு துணிக்கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 2.30 மணியளவில் ராதாகிருஷ்ணன் மரக்கட்டை மூலம் கடையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சென்று கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications