தலைக்கு தில்லு பார்த்தீங்களா.. கேரள போலீசிடமே பணம் கேட்டு, வசமாக சிக்கிய விழுப்புரம் திருடன்!
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள துணிக் கடையில் கொள்ளையடித்துவிட்டு செல்லும் வழியில் ஒரு திருடன், போலீசிடமே ஊருக்கு செல்ல பணம் கேட்டு அப்பட்டமாக சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 3.30 மணியளவில் அவர்கள் கண்ணில் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு நபர் சிக்கியுள்ளார். உடனடியாக அவரை பின்தொடர்ந்து சென்று பேசியுள்ளனர். தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்கிற அந்த நபர் இடுக்கி மாவட்டம், தொடுப்புழாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்ததாகவும், வேலை பிடிக்கவில்லை என்பதால் மீண்டும் தமிழ்நாடு செல்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு உடல்நலம் சரியில்லை என்றும், ஊருக்கு செல்ல பேருந்துக் கட்டணத்துக்கு பணம் வேண்டும் என போலீசிடம் கேட்டுள்ளார். போலீசார் அவரை மேலும், கீழும் நோட்டமிட்டபோது சட்டைப் பையில் பணம் கட்டு கட்டாக இருந்தது அப்பட்டமாக தெரிந்துள்ளது. சட்டைப் பையிலேயே ரூ.6,000 வைத்திருந்ததால், சந்தேகப்பட்டு அவரை சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அண்டர்வியரில் பதுக்கி வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
அதற்கு ராதாகிருஷ்ணன், "சார்.. இது ஹோட்டல் வேலையில் நான் சம்பாதித்து சேமித்து வைத்தத் தொகை." என்றதும் போலீசாருக்கு குபீர் சிரிப்பு வந்துவிட்டது. "அப்படியா.. சரி நீ எந்தக் கடையில் வேலை பார்க்கிறாய் சொல்." என்று கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர். ராதாகிருஷ்ணன் ஊருக்கு புதியவர் என்பதால்,பதில் சொல்ல முடியாமல் திணறியுள்ளார். ஒருகட்டத்தில் அவர், "ஆமா சார் ஒரு துணிக்கடையில் இருந்துதான் இந்தப் பணத்தை கொள்ளையடித்தேன்." என ஒப்புக் கொண்டார்.
ஆனாலும் கொள்ளையடித்த கடையின் பெயர் கூட ராதாகிருஷ்ணனுக்கு தெரியவில்லை. பிறகு போலீஸ் விசாரணையில் தொடுப்புழாவில் உள்ள ஒரு துணிக்கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 2.30 மணியளவில் ராதாகிருஷ்ணன் மரக்கட்டை மூலம் கடையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சென்று கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications