கேரள நடிகர் விஜய் பாபுவிடம் 9 மணி நேரம் விசாரணை.. நடிகையின் சம்மதத்துடன் உடலுறவு என வாக்குமூலம்
திருவனந்தபுரம்: என் மீது பாலியல் புகார் கூறிய நடிகையின் சம்மதத்தின் பேரிலேயே இருவரும் உறவு கொண்டோம் என கொச்சி காவல் நிலையத்தில் நடிகர் விஜய் பாபு பரபரப்பு வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் விஜய் பாபு, இவர் தன்னிடம் சினிமா வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் விஜய் பாபுவின் தயாரிப்பில் வெளியான படம் ஒன்றில் நடித்த நடிகையை தனது வீட்டிற்கு வரவழைத்த விஜய் பாபு, மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

பாலியல் வன்கொடுமை
தன்னை மீண்டும் மீண்டும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிப்பதாகவும் அந்த நடிகை புகார் அளித்திருந்தார். மேலும் விஜய் பாபு மீது மற்றொரு நடிகையும் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் அந்த நடிகையிடம் பார்த்த மாத்திரத்திலேயே ஒரே ஒரு முத்தம் கொடுக்குமாறு கெஞ்சினாராம். அதற்கு அந்த நடிகை இப்படியோ சமாளித்து பின்னோக்கி நகர்ந்துவிட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.

விஜய் பாபு எங்கே
இந்த நிலையில் விஜய் பாபு துபாய்க்கு தப்பி சென்றார். அவர் இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என கொச்சி போலீஸார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் 39 நாட்களுக்கு பிறகு துபாயிலிருந்து கொச்சி வந்தார் விஜய் பாபு. அவர் கொச்சி தெற்கு காவல் நிலையத்தில் ஆஜரானார்.

நடிகை குற்றச்சாட்டுக்கு மறுப்பு
அப்போது அவர் கேரள நடிகையின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் நடிகையின் சம்மதத்தின் பேரில்தான் நாங்கள் இருவரும் பாலியல் உறவு கொண்டோம். நான் சினிமா வாய்ப்பு தராததால் அவர் என் மீது இது போன்ற பொய்யான புகாரை கொடுத்துள்ளார் என விஜய் பாபு தெரிவித்தார்.

9 மணி நேரம் விசாரணை
நேற்று வந்த விஜய்பாபுவிடம் கொச்சி போலீஸார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. இதனால் மல்லுவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. இன்னொரு நடிகை அளித்த புகாரின் பேரில் அடுத்த கட்டமாக விஜய்பாபுவிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications