மிஸ் ஆகிடுச்சு! டோலோவை வைத்து "சதித்திட்டம்".. "பாய்சன்" காதலி கிரீஷ்மா வீட்டில் கிடைத்த அந்த பொருள்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஹாரோன் என்ற இளைஞரை கிரீஷ்மா என்ற பெண் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கிரீஷ்மா வீட்டில் இருந்து முக்கியமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கேரளா எல்லையில் களியக்காவிளை தாண்டி பாறசாலை பகுதியில் வசித்து வந்தார் ஷாரோன் ராஜ். கடந்த மாதம் 25ம் தேதி அந்த இளைஞர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
23 வயதே ஆன இவர் கல்லூரி படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் கிரீஷ்மா என்ற பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சர்ச்சில் திருமணம் செய்து கொண்டனர்.
கிரீஷ்மாதான் சமீபத்தில் ஷரோனை திருமணம் செய்து கொண்டு, அதன்பின் அவருக்கு விஷம் கலந்த கஷாயத்தை கொடுத்து கொலை செய்துள்ளார்.

கொலை
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக எவிடன்ஸ் கலெக்சன் பணிகளில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அதாவது குற்றம் செய்த கிரீஷ்மாவை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விசாரணை செய்வார்கள். அவர்கள் இதற்கு முன் சென்ற இடங்கள், அவர்கள் சந்தித்த இடங்கள், அவர்கள் ஒன்றாக பழகிய இடங்களுக்கு எல்லாம் அழைத்து செல்வார்கள். அதன்படி நேற்று அவர்கள் திருமணம் செய்து கொண்ட வெட்டிகாடு சர்ச்சுக்கு கொண்டு சென்றனர்.

ஷாரோன்
அங்கு ஷாரோன் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாக கிரீஷ்மா தெரிவித்து இருந்தார். நான் திருமணம் வேண்டாம் வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவன்தான் என்னை பைக்கில் இங்கு அழைத்து வந்தான். என்னை பைக்கில் அழைத்து வந்து கட்டாயபடுத்தி திருமணம் செய்து வைத்தான். என்று வாக்குமூலம் கொடுத்து இருந்தார் கிரீஷ்மா. இந்த நிலையில் அவர்கள் படித்த சிஎஸ்ஐ கல்லூரிக்கு இன்று கிரீஷ்மாவை போலீசார் அழைத்து சென்றனர்.

வீட்டில் சோதனை
இந்த சம்பவம் தொடர்பாக கிரீஷ்மா வீட்டில் இருந்து முக்கியமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அவரின் வீட்டில் இரண்டு விஷ பாட்டில்கள் பயன்படுத்தப்படாமல் கிடைத்து உள்ளன. அதேபோல் ஒரு காஷ்ய பாட்டிலும் கிடைத்து உள்ளது. இந்த பாட்டில்கள், ஷரோன் ஒருவேளை தப்பித்துவிட்டால் பின்னர் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த பாட்டில்கள் என்று கூறப்படுகிறது. அதாவது எத்தனை தடவை மிஸ் ஆனாலும் ஷரோனை கொலை செய்தே ஆக வேண்டும் என்ற திட்டத்தில் கிரீஷ்மா இருந்துள்ளார்.

கஷாயம்
அவள் வீட்டில் விஷத்தை பயன்படுத்துவது தொடர்பான புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட கொலை செய்வதில் அவர் எக்ஸ்பர்ட் போல ஆகி உள்ளார். ஷாரோனுக்கு கஷாயத்தில்தான் விஷம் வைத்து கிரீஷ்மா கொன்றுள்ளார். ஆனால் அதற்கு முன் ஜுஸில் விஷம் வைத்ததாக செய்திகள் வந்தன. இது தொடர்பாக இன்று கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் ஒரு மாதத்தில் 10 முறை நான் ஷாரோனை கொலை செய்ய முயன்றேன். அதில் இடையில் ஒரு முறை விஷ மாத்திரை கொடுத்து கொலை செய்ய முயன்றேன்.

விஷம் கொலை
கல்லூரியில் ஒரு முறை ஜூஸ் குடிக்கும் போட்டி நடந்தது. அப்போது டோலோ மாதிரிகளை பொடியாக்கி ஜுஸில் கலந்து கொடுத்தேன். 20 மாத்திரைகளை பொடியாக்கி கொடுத்தேன். ஆனால் இதனால் அவன் சாகவில்லை. அவன் வாந்தி எடுத்துவிட்டான். அதோடு பாதி ஜூசை அவன் குடிக்கவில்லை. அதனால் தப்பித்துக்கொண்டான். இப்படி ஒரே மாதத்தில் 10 முறை அவனை கொலை செய்ய முயன்றேன். இதில் கடைசியில்தான் கொலை செய்ய முடிந்தது என்று கிரீஷ்மா அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.

வாக்குமூலம்
இந்த முறை கிரீஷ்மா கல்லூரிக்கு சென்ற போது அங்கு இருந்த மாணவ, மாணவியர் பலர் கிரீஷ்மவை பார்த்து ஓ என்று கூச்சல் போட்டனர். அதோடு அங்கே பொதுமக்கள் பலரும் கூடி நின்றனர். கிரீஷ்மாவை கடுமையாக விமர்சனம் செய்து ஓ ஓ என்று கத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இருந்தாலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்ததால் சூழ்நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. நாளை கிரீஷ்மாவை அவரின் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்!












Click it and Unblock the Notifications