மிஸ் ஆகிடுச்சு! டோலோவை வைத்து "சதித்திட்டம்".. "பாய்சன்" காதலி கிரீஷ்மா வீட்டில் கிடைத்த அந்த பொருள்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஹாரோன் என்ற இளைஞரை கிரீஷ்மா என்ற பெண் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கிரீஷ்மா வீட்டில் இருந்து முக்கியமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கேரளா எல்லையில் களியக்காவிளை தாண்டி பாறசாலை பகுதியில் வசித்து வந்தார் ஷாரோன் ராஜ். கடந்த மாதம் 25ம் தேதி அந்த இளைஞர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
23 வயதே ஆன இவர் கல்லூரி படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் கிரீஷ்மா என்ற பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சர்ச்சில் திருமணம் செய்து கொண்டனர்.
கிரீஷ்மாதான் சமீபத்தில் ஷரோனை திருமணம் செய்து கொண்டு, அதன்பின் அவருக்கு விஷம் கலந்த கஷாயத்தை கொடுத்து கொலை செய்துள்ளார்.

கொலை
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக எவிடன்ஸ் கலெக்சன் பணிகளில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அதாவது குற்றம் செய்த கிரீஷ்மாவை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விசாரணை செய்வார்கள். அவர்கள் இதற்கு முன் சென்ற இடங்கள், அவர்கள் சந்தித்த இடங்கள், அவர்கள் ஒன்றாக பழகிய இடங்களுக்கு எல்லாம் அழைத்து செல்வார்கள். அதன்படி நேற்று அவர்கள் திருமணம் செய்து கொண்ட வெட்டிகாடு சர்ச்சுக்கு கொண்டு சென்றனர்.

ஷாரோன்
அங்கு ஷாரோன் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாக கிரீஷ்மா தெரிவித்து இருந்தார். நான் திருமணம் வேண்டாம் வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவன்தான் என்னை பைக்கில் இங்கு அழைத்து வந்தான். என்னை பைக்கில் அழைத்து வந்து கட்டாயபடுத்தி திருமணம் செய்து வைத்தான். என்று வாக்குமூலம் கொடுத்து இருந்தார் கிரீஷ்மா. இந்த நிலையில் அவர்கள் படித்த சிஎஸ்ஐ கல்லூரிக்கு இன்று கிரீஷ்மாவை போலீசார் அழைத்து சென்றனர்.

வீட்டில் சோதனை
இந்த சம்பவம் தொடர்பாக கிரீஷ்மா வீட்டில் இருந்து முக்கியமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அவரின் வீட்டில் இரண்டு விஷ பாட்டில்கள் பயன்படுத்தப்படாமல் கிடைத்து உள்ளன. அதேபோல் ஒரு காஷ்ய பாட்டிலும் கிடைத்து உள்ளது. இந்த பாட்டில்கள், ஷரோன் ஒருவேளை தப்பித்துவிட்டால் பின்னர் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த பாட்டில்கள் என்று கூறப்படுகிறது. அதாவது எத்தனை தடவை மிஸ் ஆனாலும் ஷரோனை கொலை செய்தே ஆக வேண்டும் என்ற திட்டத்தில் கிரீஷ்மா இருந்துள்ளார்.

கஷாயம்
அவள் வீட்டில் விஷத்தை பயன்படுத்துவது தொடர்பான புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட கொலை செய்வதில் அவர் எக்ஸ்பர்ட் போல ஆகி உள்ளார். ஷாரோனுக்கு கஷாயத்தில்தான் விஷம் வைத்து கிரீஷ்மா கொன்றுள்ளார். ஆனால் அதற்கு முன் ஜுஸில் விஷம் வைத்ததாக செய்திகள் வந்தன. இது தொடர்பாக இன்று கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் ஒரு மாதத்தில் 10 முறை நான் ஷாரோனை கொலை செய்ய முயன்றேன். அதில் இடையில் ஒரு முறை விஷ மாத்திரை கொடுத்து கொலை செய்ய முயன்றேன்.

விஷம் கொலை
கல்லூரியில் ஒரு முறை ஜூஸ் குடிக்கும் போட்டி நடந்தது. அப்போது டோலோ மாதிரிகளை பொடியாக்கி ஜுஸில் கலந்து கொடுத்தேன். 20 மாத்திரைகளை பொடியாக்கி கொடுத்தேன். ஆனால் இதனால் அவன் சாகவில்லை. அவன் வாந்தி எடுத்துவிட்டான். அதோடு பாதி ஜூசை அவன் குடிக்கவில்லை. அதனால் தப்பித்துக்கொண்டான். இப்படி ஒரே மாதத்தில் 10 முறை அவனை கொலை செய்ய முயன்றேன். இதில் கடைசியில்தான் கொலை செய்ய முடிந்தது என்று கிரீஷ்மா அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.

வாக்குமூலம்
இந்த முறை கிரீஷ்மா கல்லூரிக்கு சென்ற போது அங்கு இருந்த மாணவ, மாணவியர் பலர் கிரீஷ்மவை பார்த்து ஓ என்று கூச்சல் போட்டனர். அதோடு அங்கே பொதுமக்கள் பலரும் கூடி நின்றனர். கிரீஷ்மாவை கடுமையாக விமர்சனம் செய்து ஓ ஓ என்று கத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இருந்தாலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்ததால் சூழ்நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. நாளை கிரீஷ்மாவை அவரின் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
"Make Kerala Great Again.." கேரளாவில் வீதி வீதியாக வாக்கு கேட்கும் டிரம்ப்.. டிரெண்டாகும் வீடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications