Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லண்டன் செல்லவிருந்த நர்ஸ் பலி! கேரள கோயில்களில் அரளிப் பூக்களுக்கு தடை விதித்த தேவஸ்வம் போர்டு!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அரளிப்பூவை சாப்பிட்ட இளம்பெண் கடந்த வாரம் இறந்ததை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள கோயில்களில் அரளிப் பூக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மகள் சூர்யா (23). நர்சிங் படித்துள்ளார். இவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து லண்டன் செல்வதற்காக அவர் தயாராகிக் கொண்டிருந்தார்.

Arali flowers are banned in Kerala temples


இதற்காக அவர் கொச்சி விமான நிலையத்திற்கு கிளம்பிய சூர்யா தனது வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு தான் வெளிநாடு செல்வதை நண்பர்கள், உறவினர்களுக்கு போன் மூலம் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சூர்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் அடுத்த நாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சூர்யாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்த போதுதான் அவர் போனில் பேசியபடியே அங்கிருந்த அரளிப் பூக்களை வாயில் போட்டு மென்றது தெரியவந்தது.

அரளிப்பூக்களை சாப்பிட்டதே அவரது மரணத்திற்கு காரணம் என கேரள காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கேரள அரசு நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டுக்குள்பட்ட 1200 கோயில்கள், மலபார் தேவசம் போர்டுக்கு உள்பட்ட 1300 கோயில்கள் என சுமார் 2500 கோயில்களில் இனி அரளி பூக்களை பிரசாதமாக வழங்க தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில் திருவிதாங்கூருக்குள்பட்ட அனைத்து கோயில்களிலும் அரளி பூக்களை தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, பக்தர்கள் துளசி, இட்லி பூ, ரோஜா பூக்களை நெய்வேத்தியம் மற்றும் பிரசாதத்துக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

கோயில் பூஜைகளில் அரளிப் பூக்களைப் பயன்படுத்தலாமே தவிர பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படாது. மலபார் தேவசம் போர்டுக்கு உள்பட்ட கோயில்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக அரளிப்பூவுக்கு தடை செய்யப்படுகிறது. இந்த அரளிப் பூக்கள் பிங்க், வெள்ளை, மஞ்சள் நிறத்தில் உள்ளன.

வாஸ்து சாஸ்திரத்தில் அரளி பூக்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அரளி மலர் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சியும், பல நன்மைகளும் உண்டாகும் என்பது நம்பிக்கை. இதனால் அரளி செடி விஷமாக கருதப்பட்டாலும் வாஸ்துபடி அதன் பூக்களால் மிகவும் புனிதமானது என கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+