கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ், டிஜிபி வரிசையில்! திருவனந்தபுரத்தின் மேயராகிறாரா ஸ்ரீலேகா! யார் இவர்?
திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில் அதன் மேயராக யாருக்கு வாய்ப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி ஸ்ரீலேகா என்பவருக்கு இந்த மேயர் பதவி கொடுக்கப்படலாம் என்கிறார்கள். யார் அவர் என்பதை பார்க்கலாம்.

கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை 45 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக கைப்பற்றியுள்ளது. இங்குள்ள 101 வார்டுகளில் 50 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. இதனால் இந்த மாநகராட்சிக்கு மேயராக பாஜகவை சேர்ந்தவர் வருவார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
அந்த வகையில் ஸ்ரீலேகா என்பவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான இவர் பாஜகவின் முதல் மேயராக தேர்வு செய்யப்படுவார் என்கிறார்கள்.
ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மாநகராட்சிக்குள்பட்ட சாஸ்தமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 65 வயதை நெருங்கும் அவருக்கு மேயர் பதவி கொடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில், சாஸ்தமங்கலம் வார்டில் வேறு எந்த வேட்பாளரும் இதற்கு முன்பு இவ்வளவு வாக்குகளை பெற்றதில்லை. இந்த தீர்ப்புக்காக மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீலேகா, 1987 ஆம் ஆண்டு முதல் பெண் ஐபிஎஸ் ஆனார். 30 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணி செய்த அவர் சிபிஐ, லஞ்ச ஒழிப்பு, தீயணைப்பு படை, மோட்டார் வாகனத் துறை, சிறைத் துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியுள்ளார்.
2017ஆம் ஆண்டு கேரளாவின் முதல் பெண் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். 33 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் துறையில் பணியில் இருந்த அவர் டிசம்பர் 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை கண்டு வியந்து 2024 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இப்படி முதல் பெண் ஐபிஎஸ், முதல் பெண் டிஜிபி என பதவிகளை பெற்ற ஸ்ரீலேகா, பாஜகவின் முதல் மேயர் என்ற பெருமையையும் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications