‛‛நாங்க சொன்ன பெயரை வச்சாதான் நிதி’’.. கறார் காட்டும் மத்திய அரசு.. சிக்கலில் கேரள சுகாதாரத்துறை
திருவனந்தபுரம்: கேரளாவில் செயல்படும் 'குடும்ப ஆரோக்கிய கேந்த்ரம்' மருத்துவ மையங்களுக்கு 60 சதவிகித நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால் சமீப காலமாக இந்த நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது.
மருத்துவ கட்டமைப்புகள் பலமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தேசிய அளவில் கேரளதான் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால், சமீப காலமாக கேரளாவில் தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தின்கீழ் இயங்கும் 'குடும்ப ஆரோக்கிய கேந்த்ரம்' மருத்துவ மையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படாமல் இருக்கிறது.

இந்த மருத்துவ மையங்கள் அனைத்தும் 60 சதவிகிதம் மத்திய அரசு நிதி, 40 சதவிகிதம் மாநில அரசு நிதி என்று இயங்கி வருகிறது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு இதற்கான நிதியை வழங்கவில்லை. எனவேதான் மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் சம்பள பாக்கி பிரச்னை தலை தூக்கியிருக்கிறது. இதனால் கேரளாவின் வலுவான மருத்துவ கட்டமைப்பு, பாதிக்கப்படும் அபாயம் எழுந்திருக்கிறது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில்,
"இந்த மருத்துவ மையங்களுக்கு கேரள அரசு வழங்கியுள்ள 'குடும்ப ஆரோக்யா கேந்த்ரம்' எனும் பெயரை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' என பெயரிட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள கிராமப்புற மக்கள் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு அந்நியமான பெயரைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். இது இந்தி மொழியில் இருக்கும் பெயர். எனவே பெயரை மாற்றாததால் நிதியை வழங்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
உண்மையில் அவர்கள் நிதி வழங்குவதை தவிர்க்க ஏதேதோ காரணங்களை முன்வைக்கின்றனர். தொடக்கத்தில் அவர்கள் சில சின்னங்களை நாங்கள் வைத்திருந்த பெயர் பலகையில் சேர்க்க சொன்னார்கள். இப்படியாக 6 சின்னங்களை சேர்த்தோம். ஆனால் தற்போது, பெயரை மாற்றினால்தான் நிதி என்று கூறுகிறார்கள். இப்படி நிதி வழங்காமல் இருப்பதால் இந்த சுகாதார கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
சாமானிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. இப்படி மழுப்பலான காரணங்களுக்காக நிதி வழங்காமல் இருப்பது என்பது, நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி தன்மைக்கு எதிரானது" என்று கூறியுள்ளார்.
சமீப காலங்களில் மருத்துவத்துறையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தேசிய மருத்துவ ஆணையத்தின் லட்சிணையில் இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுள் தன்வந்திரி படம் வைக்கப்பட்டது கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது.
அதாவது, கேரளாவின் மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு "மருத்துவம் மதச்சார்பற்றது. நோயாளிகளை எந்த மருத்துவரும் மதங்களால் பாகுபடுத்தி பார்ப்பதில்லை. இப்படி இருக்கும்போது இந்து கடவுளின் உருவத்தை லோகோவாக வைப்பது என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் உயர்த்தி பிடிப்பதை போல இருக்கிறது" என்று கூறி மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications