அடுத்த ஆபத்து.. கேரளாவில் பரவியது நிபா வைரஸ்.. 2 பேர் பலி
திருவனந்தபுரம்: கேரளாவில் மர்ம காய்ச்சலால் உயிரிழந்த இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் சுமார் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு குறித்த அச்சம் மேலெழுந்திருக்கிறது. கேரளாவை சேர்ந்த இருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி உயிரிழந்தனர். இவர்கள் மர்ம காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தனர்.

அதேபோல இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட சிலரும் காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்து வந்தனர். இவர்கள் அனைவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு குறித்த அறிகுறிகள் இருந்துள்ளன. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி உயிரிழந்தவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் தீவி்ரமாக பரவி வரும் நிலையில் நிபா வைரஸ் குறித்த இந்த அறிவிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பன்றி மற்றும் வௌவால் ஆகியவற்றிலிருந்து பரவுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து கேரளா முழுவதும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. மர்ம காய்ச்சலாக இருந்தால் அது தொடர்பான அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்ள சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிபா வைரஸ் என்றால் என்ன?: இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒருவகை வைரஸ். தொடக்கத்தில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் பின்னர் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதனுக்கும் பரவுகிறது. பெரும்பாலும் பழ வௌவால்களிடமிருந்து இந்த வைரஸ் பரவுவதாக ஆய்வார்கள் கூறுகின்றனர்.
இந்த வௌவால்கள் இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ், லாவோஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற தெற்காசிய நாடுகளில் அதிகம் இருக்கின்றன. எனவே இந்த நாடுகளில் நிபா வைரஸ் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வௌவால்களிலிருந்து பன்றிகளுக்கும், அதிலிருந்து மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவுகிறது. முதன் முதலில் கடந்த 1998ம் ஆண்டுதான் இந்த ரைவஸ் பாதிப்பு சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பாதிப்பிலிருந்து மனிதர்களை காக்க ஆயிரக்கணக்கான பன்றிகள் கொல்லப்பட்டன. இது அப்போதைய சிங்கப்பூரில் பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியது.
எப்படி பரவுகிறது?: இந்த வைரஸ் தாக்கப்பட்ட வௌவால்கள் பழங்களை கடிக்கும்போதும், பழங்களின் மீது சிறுநீர் கழிக்கும்போதும் அந்த பழங்களில் வைரஸ் தங்கிவிடுகிறது. இந்த பழங்களை மனிதர்கள் சாப்பிடும்போது வைரஸ் நேரடியாக மனிதர்களுக்கு பரவுகிறது. அதேபோல, இந்த பழங்களை பன்றிகள் சாப்பிடும்போது பன்றிகளின் உடலில் வைரஸ் புகுந்துவிடுகிறது. இப்போது இந்த பன்றிகளின் எச்சில், சிறுநீர் ஆகியவற்றிலிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. பின்னர் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் தொற்றிவிடுகிறது
அறிகுறிகள் என்ன?: இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளே தென்படும். இருப்பினும் தொற்று பாதிப்பு ஏற்பட்ட 5-14 நாட்களுக்கு பின்னர்தான் இந்த அறிகுறிகள் தென்பட தொடங்கும். அறிகுறிகள் காய்ச்சலை போன்று இருந்தாலும், மருத்துவர்கள் சில தனிப்பட்ட அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளனர். இந்த அறிகுறிகள் மூலம் நிபா பாதிப்பை ஓரளவு உறுதி செய்யலாம். அதாவது, கடுமையான சுவாச தொற்று, சுவாச பிரச்னைகள், காய்ச்சல், தசை வலி, தலைவலி, தொண்டை புண், குமட்டல், வாந்தி, மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், நிமோனியா பாதிப்பு, மூளை வீக்கம் அல்லது மூளையழற்சி, 24 முதல் 48 மணி நேரத்திற்குள் கோமா நிலைக்கு படிப்படியாக முன்னேற்றம் ஆகியவை நிபா பாதிப்பின் அறிகுறிகளாக சொல்லப்படுகிறது.
இந்த தொற்று பாதிப்பிலிருந்து தப்பினாலும், வலிப்பு மற்றும் ஆளுமை மாற்றங்கள் போன்ற நீண்ட கால பக்க விளைவுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications