பயங்கரம்.. 11 முறை கத்தியால் குத்தி கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை.. ஆர்எஸ்எஸ் மீது பாயும் சிபிஎம்.. ஷாக்
11 முறை கத்தியால் குத்தி கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார்
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை 11 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.. இதனால் கேரள மாநிலமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவள்ளா தாலுகா பிரிங்கரா பகுதியை சேர்ந்தவர் சந்தீப் குமார்... 34 வயதாகிறது..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்.. பிரிங்கரா பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கமிட்டி செயலாளராகவும் செயல்பட்டு வந்தவர்.

கொடூரம்
இந்நிலையில், திருவள்ளாவில் உள்ள சேத்தன்ஹரி பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் சந்தீப் குமார் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார்... அப்போது, அவரை சிலர் பின்னாடியே பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.. சந்தீப் குமாரின் பைக்கை திடீரென மறித்து நின்ற அந்த கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சந்தீப் குமாரை 11 முறை சரமாரியாக குத்தியது.. இதில் சந்தீப்குமார் அலறி துடித்துள்ளார்..

ரத்த வெள்ளம்
அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.. ஆனால், அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. சந்தீப்குமாரும் ரத்த வெள்ளத்திலேயே அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தீப்குமாரின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...

விசாரணை
சந்தீப்குமாரை 5 இளைஞர்கள் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றதாக அங்கிருந்தோர் தெரிவித்துள்ளனர்... ஆனால் அவர்கள் யார் என்று தெரியவில்லை.. இந்த கொடூர கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கனியம்பரம்பில் ஜிஷூனு, ஸ்ரீஜித் ஆகிய 2 பேருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்..

ஆர்எஸ்எஸ்
எனவே, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்... இவர்கள் 2 பேருமே ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.. அதேபோல, சந்தீப்குமாரை கொன்றது ஆர்எஸ்எஸ் அமைப்பினர்தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது... எனினும் இந்த குற்றச்சாட்டிற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. சந்தீப்குமார் கொலை விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரானார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! ஸ்டாலின் பங்கேற்பு -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
பூ கட்டும் சிறுவனை அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவன் - நெல்லை மாவட்டத்தில் பயங்கரம்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications