Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயங்கரம்.. 11 முறை கத்தியால் குத்தி கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை.. ஆர்எஸ்எஸ் மீது பாயும் சிபிஎம்.. ஷாக்

11 முறை கத்தியால் குத்தி கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை 11 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.. இதனால் கேரள மாநிலமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவள்ளா தாலுகா பிரிங்கரா பகுதியை சேர்ந்தவர் சந்தீப் குமார்... 34 வயதாகிறது..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்.. பிரிங்கரா பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கமிட்டி செயலாளராகவும் செயல்பட்டு வந்தவர்.

 கொடூரம்

கொடூரம்

இந்நிலையில், திருவள்ளாவில் உள்ள சேத்தன்ஹரி பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் சந்தீப் குமார் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார்... அப்போது, அவரை சிலர் பின்னாடியே பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.. சந்தீப் குமாரின் பைக்கை திடீரென மறித்து நின்ற அந்த கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சந்தீப் குமாரை 11 முறை சரமாரியாக குத்தியது.. இதில் சந்தீப்குமார் அலறி துடித்துள்ளார்..

 ரத்த வெள்ளம்

ரத்த வெள்ளம்

அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.. ஆனால், அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. சந்தீப்குமாரும் ரத்த வெள்ளத்திலேயே அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தீப்குமாரின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...

 விசாரணை

விசாரணை

சந்தீப்குமாரை 5 இளைஞர்கள் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றதாக அங்கிருந்தோர் தெரிவித்துள்ளனர்... ஆனால் அவர்கள் யார் என்று தெரியவில்லை.. இந்த கொடூர கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கனியம்பரம்பில் ஜிஷூனு, ஸ்ரீஜித் ஆகிய 2 பேருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்..

 ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

எனவே, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்... இவர்கள் 2 பேருமே ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.. அதேபோல, சந்தீப்குமாரை கொன்றது ஆர்எஸ்எஸ் அமைப்பினர்தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது... எனினும் இந்த குற்றச்சாட்டிற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. சந்தீப்குமார் கொலை விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+