சிபிஎம் செயலாளர் பதவியிலிருந்து விலகிய கோடியேரி பாலகிருஷ்ணன்.. 'முதல்வரின் வலது கரம்..' என்ன காரணம்?
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளரும், முதல்வர் பினராயி விஜயனுக்குப் பிறகு கட்சியில் நம்பர் 2 இடத்தில் இருப்பவருமான, கோடியேரி பாலகிருஷ்ணன் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
கேரளாவில் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எஃப்) கன்வீனர் பதவியில் உள்ள விஜயராகவனுக்கு தற்காலிகமாக, இந்த பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சையை மேற்கோள் காட்டி பாலகிருஷ்ணன் விடுப்புக்கு விண்ணப்பித்ததாக மார்க்சிஸ்ட் கட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் கடந்த ஆண்டு சிகிச்சை பெற்றவர் கோடியேரி பாலகிருஷ்ணன். இருப்பினும், அந்த நேரத்தில், அவர் தனது பதவியில் இருந்து விலகவில்லை. பாலகிருஷ்ணன் கட்சி விவகாரங்களில் இருந்து எவ்வளவு காலம் விலகி இருப்பார் என்பது இப்போதைக்கு தெரியவில்லை.
பெங்களூரில் போதைப் பொருள் வழக்கில் கோடியேரியின், இளைய மகன் பினீஷ் கோடியேரி அமலாக்க இயக்குநரகத்தால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கோடியேரி பாலகிருஷ்ணன் கட்சி பதவியில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பினீஷ் கோடியேரி, நவம்பர் 25 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வரும் டிசம்பரில் 1200 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேரளாவில் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் நடடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல், அந்த மாநில அரசியலில் அரையிறுதி போட்டி என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் பாலகிருஷ்ணன் விலகல் இணைத்து பார்க்கப்படுகிறது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications