தங்க நகைகளை திருடி சென்ற காகம்.. 10 நாள் பதறிய குடும்பம்.. கடைசியில் ட்விஸ்ட்.. இப்படியும் நடக்குமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் கண் அசந்த நேரத்தில் தங்க வளையல், தங்க செயினை காகம் ஒன்று தூக்கி சென்று குடும்பத்தினரை 10 நாட்களாக பதற்றமடைய செய்தது. இறுதியாக தற்போது அந்த நகைகளை குடும்பத்தினர் பத்திரமாக மீட்டனர்.
வீட்டில் இருக்கும் பணம், தங்க நகைகள் உள்பட விலையுயர்ந்த பொருட்கள் திடீரென்று திருடு போவது பல இடங்களில் நடந்து வருகிறது. வீடு புகுந்து திருடர்கள், கொள்ளையர்கள் இத்தகைய செயலை செய்யும் நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து பொருட்களை மீட்பது இயல்பான ஒன்றாக உள்ளது.

ஆனால் தற்போது தங்க நகைகளை காகம் ஒன்று திருடி சென்று தனது கூட்டில் மறைத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? எப்படி நடந்தது? தங்க வளையல் எப்படி மீட்கப்பட்டது? என்பது பற்றிய விபரம் வருமாறு:
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள கபாட் பகுதியில் வசித்து வருபவர் பிபி நசீர். இவரது மனைவி பெயர் ஷரீபா. இந்த தம்பதியின் மகள் பெயர் பாத்திமா ஹைபா. இவர் கிரேட் ஒன் படித்து வருகிறார். இந்நிலையில் தான் இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கு திருமணம் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க பாத்திமா தங்க செயின், தங்க வளையல் அணிந்து சென்றார்.
திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய பாத்திமா தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி ஒரு பேப்பரில் பொதிந்து வீட்டு கிரில் அருகே வைத்தார். மேலும் அந்த நகைகளை எடுத்து பத்திரமாக வைக்கும்படி அவர் தனது தாய் ஷரிபாவிடம் கூறினார். ஆனால் ஷரிபா மறந்துவிட்டார். இதனால் நகை அப்படியே இருந்தது.
இந்நிலையில் தான் 10 நாட்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் உறவினர் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது பாத்திமாவின் நகைகள் மாயமாகி இருந்தது. இதையடுத்து அவர்கள் பாத்திமா நகையை கழற்றி வைத்த இடம் உள்பட வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பதற்றமடைந்தனர்.
இருப்பினும் அவர்கள் வீட்டு வளாகத்திலும் தேட தொடங்கினர். அப்போது தங்க செயின் அவர்களிடம் கிடைத்தது. வீட்டு வளாகத்தில் இருந்த தென்னை மரத்தின் அடியில் இருந்து தங்க செயின் கிடைத்தது. இருப்பினும் 6 கிராம் எடை கொண்ட தங்க வளையல் மாயமாகி இருந்தது. அதனை அவர்கள் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் தான் அந்த தென்னை மரத்தின் மேல் காகம் கூடு கட்டியிருப்பதும், அந்த கூட்டில் வளையல் ஒன்று இருப்பதையும் பாத்திமாவின் உறவினர் சுலைகா மற்றும் பக்கத்து வீட்டுக்காரரான சாந்தா பார்த்தனர். இதுபற்றி உடனடியாக அவர்கள் பாத்திமாவின் பெற்றோரிடம் கூறினர். அப்போது தான் காகம் தங்க வளையலை தூக்கி சென்று கூட்டில் வைத்திருக்கலாம் என அவர்கள் நினைத்தனர்.
இதையடுத்து உறவினர் அகமது கோயா அந்த தென்னை மரத்தில் காகத்தின் கூட்டை பார்த்தார். அப்போது அந்த கூட்டின் உள்ளே 6 கிராம் எடை கொண்ட தங்க வளையல் இருந்தது. இதையடுத்து அந்த வளையலை அவர் எடுத்து வந்து பாத்திமாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். மேலும் வீட்டு கிரீல் அருகே பேப்பரில் தங்க நகைகள் பொதிந்து வைத்திருந்ததை தின்பண்டம் என காகம் நினைத்து அதனை தூக்கி சென்று கூட்டில் வைத்தது தெரியவந்தது. மேலும் கூட்டில் இருந்த தங்க செயின் கீழே விழுந்ததும், வளையல் கூட்டிலேயே இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
-
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications