கேரளாவை உலுக்கிய படகு விபத்து.. பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு.. பரிதாபமாக பலியான 7 பிஞ்சுகள்.. ஷாக்
திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த படகு விபத்து காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்து உள்ளது.
மலப்புரத்தில் நடந்த படகு விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இரவு முழுக்க விடாமல் நடந்த மீட்பு பணிகள் தற்போதும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.
மலாபுரத்தில் உள்ள தன்னூர் என்ற பகுதிக்கு அருகில் இருக்கும் தூவல் தீரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கே சுற்றுலா பயணிகள் சென்ற படகு இல்லம் மூழ்கி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

நேற்று மாயை 6.30 மணி அளவில் படகில் பயணிகள் சென்று கொண்டு இருந்த போது திடீரென கப்பல் அப்படியே குலுங்கி, பல்டி அடித்து மூழ்கி உள்ளது. இதில் நீரில் மூழ்கிய பயணிகளை மீட்கும் பணிகள் நேற்று மாலையில் இருந்து நடந்து வருகிறது.
Recommended Video
அங்கே தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாநில மீட்பு படையினருடன் இணைந்து மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். அதேபோல் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
படகு விபத்து காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 17 ஆக இருந்த பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது. 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கே தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
அந்த படகில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. பெரும்பாலும் 39 பேர் பயணம் செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 8 பேர் மீட்கப்பட்ட நிலையில், 22 பேர் பலியான நிலையில் இன்னும் 9 பேர் நீருக்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படகில் இருந்தவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் சரியாகக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சம்பவத்தின் போது படகில் சுமார் 39 பேர் இருந்ததாக கூறுகின்றனர். டிக்கெட் அடிப்படையில் இந்த எண்ணிக்கையை அவர்கள் தெரிவிக்கின்றனர்.
படகில் இரண்டு அடுக்குகள் இருந்துள்ளன. மேல்பகுதியில் மக்கள் நிற்கும் இடமும், கீழ்பகுதியில் இருக்கைகளும் இருந்துள்ளன. இச்சம்பவம் நடக்கும் போது படகில் அதிக அளவில் கூட்டம் இருந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பயணிகள் சென்றுள்ளனர்.
படகு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி இயங்கி வந்துள்ளது. முக்கியமாக நேற்று சேவையில் ஈடுபடும் போது படகில் பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் படகு உரிமையாளர் விதியை மீறி செயல்பட்டு உள்ளார். அவர் மீன்பிடி படகை சுற்றுலா சேவைக்காக மாற்றியதாக கூறப்படுகிறது. சுற்றுலாப் படகுகளுக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் இல்லாமல் படகு இயக்கப்பட்டதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கே தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மோடி இரங்கல்: கேரளாவில் ஏற்பட்ட கோர படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்ததில் பலர் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications