சபரிமலைக்குத்தான் போக முடியலை.. பிரசாதமாவது வீடு தேடி வரணுமா?.. உடனே தபால் நிலையத்தை அணுகுங்கள்
Subscribe to Oneindia Tamil
பத்தினம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து அரவண பாயசம், நெய், குங்குமம், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்களை துரித தபால் மூலம் அனுப்பும் திட்டத்தை தபால் துறை தொடங்கியுள்ளது.
மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம் 15 தேதிகளுக்கு பிறகு முதல் பிப்ரவரி மாதம் வரை சபரிமலை கோயில் திறந்திருக்கும். கொரோனாவை கருத்தில் கொண்டு குறைந்த அளவிலான பக்தர்களே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் பக்தர்களுக்கு சபரிமலையிலிருந்து பிரசாரத்தை கொடுத்தால் அவர்கள் தெய்வீக உணர்வு அவர்களுக்கு கிடைக்கும். இதற்காக தபால் துறை ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது.
அதன்படி எந்த தபால் நிலையத்திலாவது ரூ 450 செலுத்தினால் போதும். சபரிமலையிலிருந்து அரவண பாயாசம், நெய், குங்குமம், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட பிரசாரங்கள் துரித தபால் அதாவது ஸ்பீட் போஸ்ட் மூலம் வீடு தேடி வரும்.












Click it and Unblock the Notifications