கேரளாவில் கொரோனாவுக்கு முதல் பலி.. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரளாவில் முதல் முறையாக கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். இறந்தவர் எர்ணாகுளம் கலாமாசேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த சுல்லிக்கல் நகரைச் சேர்ந்த 61 வயதாகும் முதியவர் என தெரியவந்துள்ளது.
Recommended Video
கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? அதிர்ச்சி ரிப்போர்ட்
கடுமையான நிமோனியாவுடன் துபாயிலிருந்து கேரளா வந்த அவருக்கு, கடுமையான இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் கொரோனா பாதிப்பு காரணமாக, இன்று காலை 8 மணிக்கு அவர் மரணமடைந்தார். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கேரளாவில் 124 கொரோனா நோயாளிகள் உள்ளனர். நேற்று ஒரே நாளில் கேரளாவில் 39 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications