திருச்சூர் அருகே தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கிய ஓட்டுநர்.. ஐந்து தமிழர்கள் பலி.. என்ன நடந்தது?
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் அருகே நாட்டிகா என்ற இடத்தில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியது.. இதில் நிகழ்விடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்த ஐந்து பேரும் தமிழர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளா மாநிலம் கண்ணூரிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்ற டிம்பர் லாரி ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் அருகே நட்டிக்கா பகுதியில் அமைந்துள்ள ஜேகே சினிமாஸ் திரையரங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகி சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தோர் மீது ஏறி இறங்கியது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் இரு குழந்தைகள் உள்பட மொத்தம் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்கள். மேலும் படுகாயமடைந்த 11 பேர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்த 5 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் யார்.. எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரம் விரைவில் தெரியவரும்.
இந்த விபத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது, லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததும், இதன் காரணமாக லாரி அவரது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.. விபத்து குறித்து வழக்குப்பதிந்துள்ள வாலப்பாடு காவல்துறையினர் லாரியில் இருந்த அலெக்ஸ், ஜோஸ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதனிடையே விபத்து நடந்த இடம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி, விபத்து நடந்த நாட்டிகா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதையும் மீறி லாரிவந்தால் விபத்து ஏற்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் சொல்கின்றன. திருச்சூர் லாரி விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூக்க கலக்கம் வந்தால் லாரிகளை ஓரமாக நிறுத்தி தூங்கிவிட்டு வாகனத்தை இயக்கினால் இதுபோன்ற பல விபத்துகள் நடப்பது தவிர்க்கப்படும் என்றும், அப்பாவி மக்கள் பலியாவை தடுக்க வேண்டியது அவசியம் என்றும் குரல்கள் வலுத்து வருகின்றன.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications