வளைகுடாவில் வெடித்த போர்.. மம்மூட்டி சொன்ன விஷயம்! மொத்த திரையுலகமும் கவனித்த பாயிண்ட்!
திருவனந்தபுரம்: வளைகுடா நாடுகளில் போர் வெடித்திருக்கும் நிலையில், மொத்த உலகமும் பதற்றத்தை எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த போர் குறித்து மலையாள நடிகர் மம்மூட்டி சொல்லியிருக்கும் விஷயம் கவனம் பெற்றிருக்கிறது.
இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தொடர்பாக நடிகர் மம்மூட்டி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த போரில் மனிதர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே தனது ஆசை என்றும், மனிதர்கள் இல்லாவிட்டாலும் மனிதநேயமாவது வெற்றி பெறட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொச்சியில் நடைபெற்ற இயக்குனர் டி.வி. சந்திரன் 50 ஆண்டு திரையுலக விழா 'ஓர்மாக்களுண்டாயிருக்கணம்' நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.
"எல்லா படங்களின் கதைகளும் எனக்குப் பிடிப்பதில்லை. எனக்கும் (டி.வி. சந்திரன்) பலவித சண்டைகள் நடந்திருக்கின்றன. அவற்றில் நாங்கள் இருவருமே தோற்கலாம் அல்லது ஒருவர் ஜெயிக்கலாம். இது எல்லா போர்களிலும் உண்டு. இப்போது நடக்கும் ஒரு போரில் யார் வெல்வார்?
இந்தப் போரில் மனிதர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம். மனிதகுலம் வெல்லும் என்றே நினைக்கிறேன். மனிதர்கள் இல்லாவிட்டாலும், மனிதநேயமாவது வெல்லட்டும்" என நடிகர் மம்மூட்டி தெரிவித்தார்.
மம்மூட்டியின் கடைசியாக வெளியான திரைப்படம் 'களம்காவல்'. அடுத்ததாக 'பேட்ரியாட்', 'பதயாத்ரா' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 'டி 55' என்ற தமிழ் படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications