"என் உயிருக்கு ஆபத்து.. விரட்டி விரட்டி அடிக்கிறாங்க".. பிந்து அம்மிணி பரபரப்பு குற்றச்சாட்டு
கேரளாவை விட்டு வெளியேற போவதாக பிந்து அம்மிணி அறிவித்துள்ளார்
திருவனந்தபுரம்: தன் உயிருக்கு ஆபத்து என்றும், தன்மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுவதால் கேரளாவை விட்டே வெளியேற போவதாகவும் பிந்து அம்மிணி பரபரப்பு புகார் ஒன்றினை தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடையை சுப்ரீம்கோர்ட்டும் 4 வருடங்களுக்கு முன்பு நீக்கியது.
இதையடுத்து வழக்கறிஞர் பிந்து அம்மிணி, கனக துர்க்கா என்ற 2 இளம் பெண்கள், போலீஸ் பாதுகாப்புடன் அந்த சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்தனர்.

தாக்குதல்கள்
இந்த நிகழ்வுக்கு 2 பேருக்குமே கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்தன.. அதனால் 2 பேருமே தலைமறைவாக இருந்து வந்தனர்.. இதனிடையே, பிந்து அம்மிணிக்கு எதிராக 2 முறை தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்நிலையில், கோழிக்கோட்டில் நேற்று மீண்டும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. தன்னுடைய வழக்கு தொடர்பாக கோழிக்கோடுக்கு சென்றுள்ளார்... கோழிக்கோடு வடக்கு கடற்கரைக்கு சென்ற அவரை மர்ம நபர் ஒருவர் கழுத்தை பிடித்து இழுத்து கீழே தள்ளி சராமரியாக அடித்திருக்கிறார்..

தாக்குதல்
இதில் நிலைதடுமாறி பிந்து அம்மிணி கீழே விழுந்த நிலையில், அப்போதும் அவரை ஒருவர் சரமாரியாக தாக்கியிருக்கிறார்.. இந்த காட்சிகள் அனைத்தும் டிவியில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிந்து அம்மிணி போலீசில் புகார் தந்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசாரும் விசாரணையை மேற்கொண்டனர்.. பிந்து அம்மினியை தாக்கியவர் பெயர் மோகன்தாஸ் என்பது தெரியவந்துள்ளது.

அதிரடி கைது
அவர் கோழிக்கோடு தொட்டியில் பகுதியை சேர்ந்தவர் என்றும், அப்போது அவர் மது போதையில் இருந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்தது.. இறுதியில், பேப்பூரை சேர்ந்த மோகன்தாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், பிந்து அம்மிணி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, பரபரப்பு தகவல்களை அளித்தார்.. அப்போது, "இங்கே கேரளாவில் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது.. என் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இங்கே இல்லை... தொடர்ந்து என்மீது தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது.. நான் பெண் என்பதாலும், ஒரு தலித் என்பதாலும் இப்படியெல்லாம் தாக்குதல் நடத்தப்படுகிறது..

பரபரப்பு
இதுக்கெல்லாம் காரணம் சங் பரிவார் அமைப்புகள் தான்.. எனக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டும் கொயிலாண்டி போலீஸ் எந்த பாதுகாப்பும் தரவில்லை.. இந்த விவகாரத்தில் பக்தர்களின் ஆதரவும் எனக்கு தேவைப்படுகிறது.. இப்படியான தொடர் தாக்குதல் காரணமாக, என்னால் கேரளாவில் வாழ முடியவில்லை.. அதனால் இந்த மாநிலத்தை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications