SIR தந்த பிரஷர்.. டார்க்கெட்டால் வாக்குச்சாவடி அலுவலர் தற்கொலை.. மாநிலம் முழுதும் போராட்டம்
திருவனந்தபுரம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணியாற்றி வந்த பள்ளி ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் விண்ணப்பம் வழங்குவதற்கு டார்க்கெட்டை முடிக்க முடியாத பிரஷரில் தற்கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் கோபமாகி உள்ள அரசு ஊழியர்கள், பிஎல்ஓக்கள் இந்திய தேர்தல் ஆணையத்தை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
கேரளாவின் கண்ணூரை சேர்ந்தவர் அனிஷ் ஜார்ஜ் (வயது 44). இவர் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தற்போது தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடக்கிறது.

அதேபோல் கேரளாவிலும் அந்த பணி நடந்து வருகிறது. இதனால் பிஎல்ஓ எனும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான படிவங்களை வழங்கி வருகின்றனர்.
இந்த பணிக்கான அனீஷ் ஜார்ஜ்சும் வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் நேற்று அவர் திடீரென்று தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்கில் தொங்குவதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அனீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஏற்பட்ட பிரஷர் காரணமாக தான் அனீஷ் ஜார்ஜ தற்கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். அதாவது தினமும் குறிப்பிட்ட அளவிலான வாக்காளர்களுக்கு விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டார்க்கெட்டை முடிக்க முடியாமல் அனீஷ் ஜார்ஜ் திணறியுள்ளார். இருப்பினும் நள்ளிரவு வரை அவர் இந்த பணிகளை மேற்கொண்டு வந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி அவரது குடும்பத்தை சேர்ந்த ஷ்யாம் என்பவர் கூறுகையில், ‛‛நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 2 மணிக்கு தான் அனீஷ் ஜார்ஜ் வீட்டுக்கு வந்தார். SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வழங்குவதில் மனஅழுத்தத்துக்கு உள்ளானார். இப்போது தற்கொலை செய்துவிட்டார்'' என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் இயற்கைக்கு மாறான சாவு (Unnatural Death) என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
அனீஷ் ஜார்ஜின் இந்த தற்கொலை அரசு ஊழியர்களிடையே கோப அலையைத் தூண்டியுள்ளது. கேரளா முழுவதும் இன்று (நவம்பர் 17) போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 3 முக்கிய அமைப்புகளாக உள்ளன மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல் மன்றம், ஆசிரியர் சேவை அமைப்புகளின் கூட்டுக் குழு மற்றும் கேரள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சங்கம் சார்பில் இன்று நாடு முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட உள்ளது.
மேலும் இன்றைய தினம் பிஎல்ஓ எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணி புறக்கணிப்பை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் போராட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‛‛இந்திய தேர்தல் ஆணையம் எங்களின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கையை தள்ளிவைக்க கூறியும் கேட்காமல் உள்ளது. பிஎல்ஓக்களுக்கு பிரஷர் அதிகரித்துள்ளது. இரவு -பகலாக பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் குறைந்த காலத்துக்குள் தகுதிக்கு மீறிய டார்க்கெட் வழங்கப்பட்டுள்ளது. எங்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் போராட்டம் தீவிரமாகும்'' என்று ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications