இந்தியா கூட்டணி.. மூணாறு தாண்டுனா முட்டிக்குது! ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவுடன் பிரியங்கா! பினராயி புகார்
திருவனந்தபுரம்: வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில், பிரியங்கா காந்தி, ஜமாத்-இ-இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார் கேரள முதல்வரான பினராயி விஜயன்.
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி பெரிய வெற்றி பெற்றார். இதை அடுத்து ஒரு தொகுதியில் எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது.

இதனைத் தொடர்ந்து எந்த தொகுதியில் எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் என்ற கேள்வி எழுந்தது. வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் எனவும் அதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வயநாடு தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் நாடு முழுவதும் உள்ள 48 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், 23ஆம் தேதி வாக்கு கள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பிரியங்கா காந்தி ஜமாத்-இ-இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார் கேரள முதல்வரான பினராயி விஜயன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,"வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸின் மதசார்பற்ற முகம் முற்றிலும் அவிழ்க்கப்பட்டுள்ளது. வயநாட்டில் ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவு வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். காங்கிரஸின் நிலை என்ன? நமது நாடு ஜமாத்தே இஸ்லாமிக்கு அறிமுகம் இல்லாத நாடு அல்ல. அந்த அமைப்பின் நிலைப்பாடு ஜனநாயகமா?
இஸ்லாமிய அரசையும் நாட்டின் ஜனநாயகத்தையும் ஜமாஅவை முக்கியமாகக் கருதவில்லை. நாட்டின் ஆட்சியை கணக்கில் கொள்ளவில்லை. பொதுநலக் கட்சியை உருவாக்குவதும், அரசியல் கட்சியாக செயல்படுவதும் ஒரு மறைப்பாகும். அந்த கவர் ஜம்மு காஷ்மீரில் காணப்பட்டது. ஜம்மு காஷ்மீர் தேர்தலை ஜமாத்-இ-இஸ்லாமி இதுவரை கடுமையாக எதிர்த்து வருகிறது. அவர் தீவிர வகுப்புவாத நிலைப்பாட்டை எடுத்தார். இப்போது அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக நின்றார்கள்.
அங்கு மூன்று அல்லது நான்கு இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இறுதியில், CPI-M தலைவர் முஹம்மது யூசுப் தாரிகாமி போட்டியிடும் தொகுதியில் கவனம் செலுத்தினார். ஜம்மு-காஷ்மீர் ஜமாத்-இ-இஸ்லாமி முழுவதுமே அங்கு குவிக்கப்பட்டது. தாரிகாமியை தோற்கடிப்பதே நோக்கமாக இருந்தது. அதைத்தான் பாஜகவும் விரும்பியது.
அங்குள்ள பயங்கரவாதிகளும், பாஜகவும் அதையே விரும்பினர். ஆனால் மக்கள் தாரிகாமியையே தேர்ந்தெடுத்தனர். இங்குள்ள ஜமா அத்தே இஸ்லாமியர்கள் இரண்டு ஜமா அத்தே இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களும் இருப்பதாக கூறுகிறார்கள். ஜமாஅத் ஏதே இஸ்லாம் ஒரே ஒரு கொள்கையைக் கொண்டுள்ளது. எந்த விதமான ஜனநாயக ஆட்சியையும் அவர்கள் ஏற்கவில்லை. அது அவர்களின் எண்ணம். இப்போது அவர்கள் UDFக்கு உதவ விரும்புவதாகத் தெரிகிறது.
மதச்சார்பின்மையின் பக்கம் இருப்பவர்கள் அனைத்து வகையான வகுப்புவாதத்தையும் கடுமையாக எதிர்க்க வேண்டாமா? காங்கிரஸால் முடியுமா? முஸ்லிம் லீகும் மற்றவர்களும் சில "தியாகங்கள்" செய்து காங்கிரஸ்-ஜமா-இ-இஸ்லாமி கூட்டணியுடன் நிற்கிறார்கள். காங்கிரஸால் ஜமாஅத்தே இஸ்லாமியின் வாக்கு வேண்டாம் என்று சொல்ல முடியுமா? அந்த உற்சாகம் என்ன என்பதை காங்கிரஸின் பொறுப்புள்ளவர்கள் புரிந்து கொள்ள விரும்பினால், ஒரு கட்டத்தில் தோழர் இ.எம்.எஸ் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தலச்சேரியில் நடந்த இடைத்தேர்தலில் வெளிப்படையாகவே 'எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் ஓட்டுகள் வேண்டாம்!. காங்கிரஸால் அத்தகைய நிலைப்பாட்டை எடுக்க முடியுமா?" என கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணி: இந்திய அளவில் இந்தியா கூட்டணி வலுவனதாகவே இருக்கிறது. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. ஆனால் கேரளாவில் இந்தியா கூட்டணி தலைகீழாக உள்ளது. தற்போது தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி கடும் சவாலை சந்திக்க வேண்டி உள்ளது. கடந்த சில தேர்தல்களை காங்கிரஸ், இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சந்தித்தது. ஆனால் கேரளாவை பொறுத்தவரை காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எலியும் பூனையுமாக இருப்பவை. கடத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர் எதிர் துருவங்களாக தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications