அமித்ஷா கருத்து போராட்டத்துக்கு வழிவகுக்கும்...! பினராயி எச்சரிக்கை
திருவனந்தபுரம்: நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை திசை திருப்பவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியை கையில் எடுத்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தமிழகம் மட்டுமன்றி இந்தி பேசாத அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் மொழியை வைத்து இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தி தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் என்ற அமித்ஷாவின் பேச்சு ஏற்கத் தக்கதல்ல எனவும், அவரது பேச்சை கவனித்தால், தாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போராட்டத்தை போல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சங்பரிவார் அமைப்புகள் இதுபோன்ற நடவடிக்கைகளை இத்துடன் கைவிட்டு விட வேண்டும் என பினராயி எச்சரித்துள்ளார். மேலும், நாடு எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சனைகள் பற்றி மக்கள் சிந்திக்கக்கூடாது எனவும், அவர்களை திசை திருப்பும் முயற்சியாகவே அமித்ஷா இந்தியை கையில் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications