தொற்று குறையவே இல்லை.. கேரளாவில் ஜுன் 16 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.. பினராயி விஜயன் அதிரடி
கேரளாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இன்னும் வரவில்லை என்பதால் ஜுன் 16 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டதாக முதல்வர் பினராயிவிஜயன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு முயற்சிகள், மக்களின் ஒத்துழைப்புகள் கிடைத்ததன் விளைவாக கடந்த வருடம் கேரளாவில் தொற்று குறைந்தது.. ஆனால், இந்த முறை நிலைமை அப்படி இல்லை.
தொற்றுபரவலை தடுக்கும் வகையில் ஜுன் 9 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.. ஆனால், கொரோனா பரவல் கட்டுக்குள் இன்னும் வரவில்லை என்பதால் ஜுன் 16 வரை அங்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டதாக மாநில முதல்வர் பினராயிவிஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சொல்லும்போது, "ஜுன் 12,13ல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்... அத்தியாவசிய கடைகள், சிறு தொழில்களுக்கான மூலப்பொருட்கள் விற்கும் கடைகள், கட்டுமான பொருள் கடைகள் வழக்கம்போல் செயல்படும்... வங்கிகள் திங்கள், புதன், மற்றும் வெள்ளி கிழமைகளில் செயல்படும்.
ஸ்டேஷனரி, நகை, செருப்பு, ஜவுளி, கண்ணாடி கடைகள் ஜுன் 11 மட்டும் காலை 7 முதல் இரவு 7 மணி வரை செயல்படும்... அதேபோல, அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் ஜுன் 17 முதல் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்... தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான எல்லா உதவிகளும் செய்யப்படும்.
வாகன ஷோரூம்களில் பராமரிப்பு மையங்கள் ஜுன் 11ல் செயல்படும். ஆனால், விற்பனைக்கு அனுமதியில்லை. கேரள ஹைகோர்ட் வலியுறுத்தல்படி வக்கீல்கள் மற்றும் கோர்ட் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்படும்... தனியார் பஸ் ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications