கேரளா அமைச்சரவையில் முதல் கொரோனா.. நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தொற்றால் பாதிப்பு
திருவனந்தபுரம்: கேரள நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கேரள நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக்குக்கு இன்று மாலை நடத்தப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கேரள அமைச்சரவையில் கொரோனா வைரஸால் முதல்முறையாக அமைச்சர் தாமஸ் ஐசக் தான். இவரது அமைச்சகத்தின் அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் அனைவருக்கும் நெகட்டிவ் என்பது சோதனை முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பாதிப்பைவிட டிஸ்சார்ஜ் அதிகம்.. தமிழகத்தில் நல்ல மாற்றம்.. இன்றைய அப்பேட்.. விவரம்!
இதனிடையே நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் தன்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சரின் அலுவலகம் நாளை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.