வாவ்.. தமிழக அரசு தவற விட்டதை அறிவித்த கேரள முதல்வர்.. மீனவர்கள் மகிழ்ச்சி
திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் தொற்றுநோய் அதிகரித்துள்ள நிலையில், லாக்டவுனுக்கு மத்தியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு வகையான, தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குவதாக முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமையான இன்று அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு, பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

கேரள தையல் தொழிலாளர் நல நிதி வாரியம், கேரள நகை தொழிலாளர் நல நிதி வாரியம், கேரள வேளாண் தொழிலாளர் நல நிதி வாரியம், கேரள மூங்கில் தொழிலாளர் நலத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
கேரளாவில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் தலா ரூ .2,000 வழங்கப்படும். கேரளாவில் சுமார் 1.5 லட்சம் மீனவர்கள் உள்ளனர். சுமார் 50,000 லாட்டரி விற்பனையாளர்களுக்கு தலா ரூ .1,000 வழங்கப்படும்.
பீடி தொழிலாளர்கள், மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
நல வாரியத்திடமிருந்து ஓய்வூதியம் பெறாத சுமார் 1,30,000 கயிர் தொழிலாளர்களுக்கு தலா ரூ .1,000 வழங்கப்படும். இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த 6ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி, வெளியிட்ட அறிவிப்பில், 17 வகை நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.1,000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களும் விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.
மீன் சந்தைகளுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மீனவர்கள் மீன்பிடிக்க கடும் கெடுபிடிகள் காட்டப்படுகிறது. எனவே, அவர்களுக்கும் நிதி உதவி தேவை. ஆனால் முதல்வர் அறிவிப்பில் மீனவர்களை மிஸ் செய்துவிட்டார். அதேநேரம், கேரள முதல்வர் மீனவர்களுக்கும், உதவித் தொகை அறிவித்துள்ளார். அதுவும் பிற தொழிலாளர்களை ஒப்பிட்டால் மீனவர்களுக்கு கூடுதல் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
மற்ற தொழிலாளர்களுக்கு ரூ.1000 உதவித் தொகை என்றால், மீனவர்களுக்கு ரூ.2000 வழங்குவதாக அறிவித்துள்ளார் பினராயி விஜயன். இந்த விஷயத்தில், தமிழக அரசு விரைவாக இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்பதே மீனவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications