சீட் பெல்ட் போடவில்லை! பினராயி விஜயன் காருக்கே அபராதம்.. அசால்ட் செய்த கேரள போக்குவரத்து துறை
திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலக காரில் பயணம் செய்த பாதுகாவலர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால், முதல்வரின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் காராக இருந்தாலும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து இருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க சாலைகளில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் இந்த கேமராக்கள் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் நபர்களை அப்படியே படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி விடும். ரூ. 232 கோடி ரூபாய் செலவில் கேரளாவின் முக்கிய சாலைகள் அனைத்திலும் இந்த கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

போலீஸ்தான் இல்லையே என நினைத்துக் கொண்டு... கண்ட இடங்களில் வாகனத்தை பார்க் செய்து வைத்தல், அதிவேகம், சீட் பெல்ட் அணியாமல் செல்வது, தலைக்கவசம் இன்றி பைக் ஓட்டுவது,போன் பேசிக்கொண்டே செல்வது போன்ற சாலை விதி மீறல்களில் ஈடுபட்டால் அடுத்த சில மணி நேரங்களில் செல்போனுக்கு வந்து அபராதம் கட்டுவதற்கான ரசீது வந்து விடும்.
அதி நவீன கேமிரா: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே கேரளாவில் போக்குவரத்து விதி மீறல்களை போலீசார் இந்த முறையில் கண்காணித்து வருகிறார்கள். இந்த நவீன கேமராக்கள் இல்லாத பகுதிகளில் போலீசார், விதி மீறும் வாகனங்களை தங்கள் செல்போனில் போட்டோ எடுத்து அபராதம் விதித்தும் வருகிறார்கள். வாகனங்களின் எண்ணை வைத்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
பினராயி விஜயன் காருக்கு அபராதம்: இந்த நிலையில், தான் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் காருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ம் கோட்டயம் அருகே உள்ள முண்டக்கயம் - குட்டிக்கானம் சாலையில் முதல்வர் பினராயி விஜயனின் கார் சென்றுள்ளது. பினராயி விஜயன் பஸ்சில் சென்றதால் பின்னால் வந்த அவரது காரில் பாதுகாவலர் மற்றும் அதிகாரிகள் மட்டுமே இருந்தனர்.
முதல்வரின் அலுவலக காரின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் சீட் பெல்ட் அணியவில்லை. இதை சாலையில் வைக்கப்பட்டிருந்த செயற்கை நுண்ணறிவு கேமரா படம் பிடித்தது. இதையடுத்து முதல்வர் பினராயி விஜயனின் காருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு அவரது அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
ரூல்ஸ் ரூல்ஸ்தான்: டிசம்பர் மாதமே அபராதம் கட்ட நோட்டீஸ் அனுப்ப பட்ட போதிலும் தற்போது வரை அபராதம் செலுத்தவில்லையாம். இது பல்வேறு விமர்சனங்களை தற்போது கிளப்பியுள்ளது. யாராக இருந்தாலும் ரூல்ஸ் ரூல்ஸ்தான் என்ற அடிப்படையில் கேரள போலீசார் செயல்பட்ட விதம் வரவேற்பை பெற்றுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications