சபரிமலைக்கு கூடுதல் பக்தர்கள்.. கடுமையாக எதிர்க்கும் கேரள அரசு.. என்ன காரணம்
சபரிமலை: சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது என்று கேரள அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு காரணம், ஐந்தாயிரம் பேரை சோதித்து அனுப்பும் அளவுக்கு கட்டமைப்பை உருவாக்குவது சவாலானது என்று எதிர்த்துள்
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா பரவலை தடுப்பதற்காக, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், மகரவிளக்கு அன்று 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பக்தர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும்படி கேரள அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. ஆனால் அதை கேரள அரசு ஏற்கவில்லை. இதனால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிடும்படி தமிழ்நாடு, உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம், தினமும் 5000 பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிக்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவு, கடந்த 20ம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் கேரள அரசோ சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், 'கொரோனா மற்றும் உருமாறிய கொரோனா என பல்வேறு பிரச்னைள் காணப்படுகிது. இதுபோன்ற சூழலில், சபரிமலையில் எப்படி தினமும் 5 ஆயிரம் பேரை வழிப்பாட்டுக்கு அனுமதிக்க முடியும்? மேலும், அவர்களுக்கு தொற்று பரிசோதனையை செய்ய சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புக்காக போலீசார் ஆகியோரையும் பணியமர்த்த வேண்டும். இது மிகவும் சவாலானது. கூட்டம் அதிகமானால் கொரோனா தொற்றும் அதிகரிக்கக் கூடும். அதனால், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications