சபரிமலைக்கு கூடுதல் பக்தர்கள்.. கடுமையாக எதிர்க்கும் கேரள அரசு.. என்ன காரணம்
சபரிமலை: சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது என்று கேரள அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு காரணம், ஐந்தாயிரம் பேரை சோதித்து அனுப்பும் அளவுக்கு கட்டமைப்பை உருவாக்குவது சவாலானது என்று எதிர்த்துள்
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா பரவலை தடுப்பதற்காக, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், மகரவிளக்கு அன்று 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பக்தர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும்படி கேரள அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. ஆனால் அதை கேரள அரசு ஏற்கவில்லை. இதனால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிடும்படி தமிழ்நாடு, உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம், தினமும் 5000 பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிக்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவு, கடந்த 20ம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் கேரள அரசோ சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், 'கொரோனா மற்றும் உருமாறிய கொரோனா என பல்வேறு பிரச்னைள் காணப்படுகிது. இதுபோன்ற சூழலில், சபரிமலையில் எப்படி தினமும் 5 ஆயிரம் பேரை வழிப்பாட்டுக்கு அனுமதிக்க முடியும்? மேலும், அவர்களுக்கு தொற்று பரிசோதனையை செய்ய சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புக்காக போலீசார் ஆகியோரையும் பணியமர்த்த வேண்டும். இது மிகவும் சவாலானது. கூட்டம் அதிகமானால் கொரோனா தொற்றும் அதிகரிக்கக் கூடும். அதனால், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications