கேரளாவில் கன மழை.. பம்பையில் வெள்ளம்.. ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை.. காசர்கோடுக்கு ரெட் அலர்ட்
Recommended Video

திருவனந்தபுரம்: கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக, கேரளாவின் காசர்கோடு மாவட்டத்திற்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவின், இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எனவே, இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூலை 19 முதல் 22 வரை வயநாடு பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. நாளொன்றுக்கு 20 செ.மீ க்கும் அதிகமான மழை பெய்யும் வாய்ப்பு இருந்தால் இந்த எச்சரிக்கைவிடுக்கப்படும்.
ஜூலை 19 ம் தேதி மலப்புரம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கும், ஜூலை 20 ஆம் தேதி காசர்கோடு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விரிவுபடுத்தப்பட்டது.
ரெட் அலர்ட் விடுக்கப்படுவது என்பது, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான எச்சரிக்கையாகும்.
ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள நான்கு அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், கரைகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களும் மேற்கண்ட நாட்களில் மிக அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் அங்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்படவில்லை.
கேரளா கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதியில், வடமேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசுவதால் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து நாள் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள பதனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், இடைவிடாத மழையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பம்பை நதி பெருக்கெடுத்து ஓடுவதால், பக்தர்கள் எச்சரிக்கையோடு இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications