சபரிமலை தங்கம் திருட்டில் பெரிய ட்விஸ்ட்.. தலைமை அர்ச்சகர் அதிரடி கைது! என்ன நடந்தது?
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க திருட்டு வழக்கு இப்போது சூடுபிடித்துள்ள நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடியாகப் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே தங்கத் திருட்டில் முக்கிய பங்கு இருப்பதாகச் சொல்லி தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரரு என்பவரைச் சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.
கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாகக் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரிக்கும். முறையாக விரதம் இருந்து பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதற்கிடையே சபரிமலை கோயிலில் கடந்த 2019ல் அரங்கேறிய தங்கத் திருட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது அப்போது நடந்த புனரமைப்புப் பணிகளின்போது கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் இருந்த தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்டன. தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கப்பட்டன.
அப்போது தான் தங்கம் திருட்டு போனது. துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம், கருவறை கதவுகளில் இருந்த தங்கம் எனச் சுமார் 4 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாகக் கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இடையில் கேரள ஐகோர்ட் உத்தரவின்படி சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இப்போது அந்தக் குழுவே விசாரணையைக் கவனித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை தேவசம் போர்டு முன்னாள் தலைவர், நிர்வாக அதிகாரி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே இன்றைய தினம் சபரிமலை தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரரு என்பவர் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் விசாரணைக்காக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்ஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். உன்னி கிருஷ்ணன் போத்தி என்பவருடன் ராஜீவரவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், தங்கத் திருட்டு சம்பவத்தில் அவருக்கு முக்கியப் பங்கு இருந்ததாகவும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உன்னி கிருஷ்ணன் போத்தியை சபரிமலைக்கு அழைத்து வந்ததே கண்டரரு ராஜீவரவுதான் என்று கைது செய்யப்பட்ட வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த வாக்குமூலங்களின் அடிப்படையில், எஸ்ஐடி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை ராஜீவரவை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்தனர். பிற்பகல் வரை அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னரே, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இதில் மேலும் பலர் சிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications