Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவியை 4 பேருக்கு விருந்தாக்கிய கணவன்.. மதுவை ஊற்றி.. சிகரெட்டால் சூடுவைத்து.. ரோட்டில் வீசிய அவலம்

மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த கணவன் கைதானார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மனைவிக்கு மதுவை ஊற்றி... நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரமும் செய்து நடுரோட்டில் கிழிந்த ஆடையுடனும், படுகாயங்களுடன் வீசிவிட்டு சென்றுள்ளார் கணவர்.. இவ்வளவு கொடூரமும் அவர்களின் 5 வயது மகன் கண்முன்னாடியே நடந்துள்ளது! இதையடுத்து கணவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மற்றொருவரை தேடி வருகின்றனர்.. தற்போது கேரள மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்கள் அந்த தம்பதி.. மனைவிக்கு 25 வயதாகிறது.. 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உட்பட 2 மகன்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று இவரது கணவர், வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மனைவியை குடிக்க வைத்துள்ளார்.. பிறகு தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் 5 பேரை அழைத்து வந்து, மனைவியை பலாத்காரம் செய்தார்.

குழந்தை

குழந்தை

5 வயது மகன் கண்முன்னாடியே மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மிரண்டு விழித்து அந்த குழந்தையையும், கொடூரமாக இவர்கள் அனைவரும் சேர்ந்து தாக்கி நடுரோட்டில் வீசிவிட்டு போயுள்ளனர். கிழிந்த ஆடைகள், படுகாயங்களுடன் ரோட்டில் விழுந்து கிடந்த பெண்ணின் நிலைமையை பார்த்த ஒரு இளைஞர், அவரை மீட்டு தன் காரில் ஏற்றி கொண்டு பெண்ணின் வீடு வரை கொண்டு வந்து விட்டுவிட்டு சென்றுள்ளார்.

விசாரணை

விசாரணை

பிறகு போலீசிலும் சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் தந்திருக்கிறார். இதையடுத்தே விசாரணை ஆரம்பமானது.. அப்போது போலீசில் பாதிக்கப்பட்ட பெண் சொல்லும்போது, "என்னையும் என் குழந்தையையும், என் கணவர் புதுக்குறிச்சி பீச் அருகே உள்ள ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு எனக்கு மதுவை ஊற்றி குடிக்க சொன்னார்கள்.. நான் மறுத்ததும், என் வாயில் கட்டாயப்படுத்தி ஊற்றிவிட்டனர்.

வன்கொடுமை

வன்கொடுமை

நான் போதையில் மயங்கி விழுந்ததும், நண்பர்கள் அனைவரும் என்னை மாறி மாறி பலாத்காரம் செய்தனர்.. என் மகன் முன்பே அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர்" என்றார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை தந்த நிலையில்,இ ஒரு டிவி சேனலுக்கும் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி தந்திருந்தார்.. அதில், தன்னை பலாத்காரம் செய்தபோது, கணவரும்,அவரது நண்பர்களும் தன் சிகரெட் நெருப்பால் உடம்பெல்லாம் சூடு வைத்து காயப்படுத்தியதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

சித்ரவதை

சித்ரவதை

இந்த விஷயம் தெரிந்த உடனேயே கணவரும், அந்த 5 நண்பர்களும் எஸ்கேப் ஆன நிலையில், தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து உள்ளே தள்ளி உள்ளனர்.. கணவர் உட்பட 6 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.. மற்றொருவரை தேடி வருகிறார்கள்.. குழந்தையை கொடூரமாக சித்ரவதை செய்ததால் அவர்கள் மீது போக்சோ உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த பலாத்கார சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகளிர் ஆணையம்

மகளிர் ஆணையம்

இதனிடையே, சம்பவம் குறித்து அறிந்ததும் கேரள மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.. மகளிர் ஆணையத்தின் தலைவர் எம்சி, ஜோஸபைன், இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று திருவனந்தபுரம் ஊரக போலீஸ் எஸ்பிக்கு நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளார்... பெண் பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜா டீச்சரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார் "அந்த பெண்ணை குழந்தை முன்னாடியே பலாத்காரம் செய்த கொடூரமான மனம் கொண்டவர்கள் எல்லார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+