எங்கும் மரண ஓலம்.. உதவிக்கு அழைத்த மக்கள்.. நடந்தது என்ன?.. கோழிக்கோடு விபத்தில் பிழைத்தவர் விளக்கம்
திருவனந்தபுரம்: எங்கும் மரண ஓலம், ஆங்காங்கே உதவிக்கு அழைத்த மக்கள் என கோழிக்கோடு விமான விபத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அந்த விபத்தில் உயிர் பிழைத்தவர் விளக்கினார்.
கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த விமானம் தரையிறங்கும் நேரத்தில் 35 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து இரண்டாக உடைந்துவிட்டது. இந்த விபத்தில் இதுவரை 19 பேர் பலியாகிவிட்டனர்.
நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த விபத்து சம்பவத்தில் இருந்து உயிர் பிழைத்த கே கே ரியாஸ் (26) கூறுவதை கேட்போம். இவர் கோழிக்கோட்டில் உள்ள வெலிமன்னா கிராமத்தை சேர்ந்தவர். துபாயில் சேல்ஸ்மேனாக பணியாற்ற 6 மாதங்களுக்கு முன் சென்றார். லாக்டவுனால் தற்போது தாயகம் திரும்பிய போது அவர் விமான விபத்தில் சிக்கினார்.

அதிர்ஷ்டம்
கோழிக்கோடு மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ரியாஸ். அவர் கூறுகையில் இந்த விபத்தில் என் இருக்கைக்கு அருகில் உட்கார்ந்திருந்த ஒருவர் உயிரிழந்துவிட்டார். பெரும்காயம் அடையாதது நான் செய்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். ரன்வேயை விமானம் நெருங்கியது. அப்போது விமானம் அதிர்வது போன்ற உணர்வு ஏற்பட்டது.

கால் மீது விழுந்த கருவி
ஆனால் அடுத்த சில வினாடிகளில் என்ன நடந்தது என என்னால் நினைவுக் கூர முடியவில்லை. அப்போது நான் பார்த்த போது நான் விமானத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்தேன். என்னால் கைகளையும், கால்களையும் அசைக்க முடியவில்லை. என் தலை மேல் இருந்த ஒரு எலக்ட்ரிக் கருவி என் கால் மீது விழுந்துவிட்டது. இதில் நான் சிக்கிக் கொண்டேன்.

உறவினர்
எனது முகத்தின் மேல் எனது வலது கை இருந்தது, அது எனது மூக்கை அழுத்திக் கொண்டு இருந்தது, என்னால் கைகளையும் கால்களையும் அசைக்க முடியாததால் மூச்சுவிட சிரமமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் குழந்தைகளின் அலறல்களை கேட்டேன். நிறைய பேர் உதவிக்கு அழைத்தனர். எனது சீட்டுக்கு அருகே உட்கார்ந்திருந்த ஒருவர் இறந்துவிட்டதாக அவருடைய உறவினர் கூறியதை நான் கேட்டேன்.

உட்கார்ந்திருந்தேன்
ஜன்னலோர சீட்டில் நான் உட்கார்ந்திருந்ததால் என்னால் எனது தலையை திருப்ப முடியவில்லை. சில மணி நேரம் கழித்து சிலர் வந்து என்னை வெளியே எடுக்க முயற்சித்தனர். அப்போது அவர்களால் முடியாததால் தீயணைப்பு துறையினர் வருவார்கள் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். நான் முன் சீட்டுக்கும் எனது சீட்டுக்கும் இடையே சிக்கி கொண்டதால் தீயணைப்பு துறையினர் வந்து சீட்டுகளை பிரித்து என்னை இரவு 11 மணிக்கு மீட்டனர் என்றார் ரியாஸ்.
-
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
இத்தோடு விஜய் அரசியல் முடியனும்.. திமுக தீவிரம்.. காங்கிரசிடம் இறங்கிப் போய் கூட்டணி வைத்த ரகசியம்












Click it and Unblock the Notifications