கோழிக்கோட்டில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு.. விசாரணை தொடங்கியது
திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த கருப்பு பெட்டியை பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Recommended Video
துபாயிலிருந்து கோழிக்கோட்டிற்கு 184 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது கனமழையால் விமானம் சறுக்கி விபத்துக்குள்ளானது. விமானம் சுமார் 35 அடி ஆழத்தில் விழுந்துவிட்டது.
இதில் விமானி, துணை விமானி உள்பட 17 பேர் பலியாகிவிட்டனர். இந்த விமானம் தரையிறங்கும் போது வேகத்தில் வந்ததாகவும், விமானத்தை தரையிறக்க விமானிக்கு சவாலாக இருந்ததாகவும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

தரையிறக்க
மேலும் டேபிள் டாப் எனப்படும் மலைப்பாங்கான ஓடுதளத்தில் ஒரு விமானத்தை மேல் நோக்கி எடுப்பதும், தரையிறக்குவதும் அத்தனை கடினம் அல்ல என்கிறார்கள் நிபுணர்கள். இது போன்ற மலைபாங்கான ரன்வேக்களில் விமானத்தை தரையிறக்குவதற்கென விமானிக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மனித தவறுகள்
இந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளானதற்கு மனித தவறுகள் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. கனமழை பெய்து வந்ததால் விமானத்தை கோழிக்கோட்டில் தரையிறக்க வைக்காமல் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பிவிட்டிருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

கேள்விகள்
மேலும் ஏற்கெனவே மலைபாங்கான பாதை இதில் மழை வேறு எதற்காக இந்த ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும் என்ற கேள்விகளும் எழுகின்றன. எனவே விமானத்தை தரையிறக்க யார் சிக்னல் கொடுத்தது, விமான கட்டுப்பாட்டு அதிகாரி கனமழை குறித்து விமானியை எச்சரிக்கவில்லையா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

முக்கியமானது
இந்த நிலையில் ஒவ்வொரு விமான விபத்திற்கும் முக்கியமானது கருப்பு பெட்டியாகும். இந்த கருப்பு பெட்டி, அதாவது டிஜிட்டல் விமான தகவல் பதிவு செய்யும் கருவி என அழைக்கப்படும் இந்த கருவி விமானத்தில் இருந்தே கண்டெடுக்கப்பட்டது. அது போல் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் கருவியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டி இரு பகுதிகளை கொண்டுள்ளது. ஒன்று டேட்டா ரெக்கார்ட்ர் மற்றொன்று வாய்ஸ் ரெக்கார்டர்.

சேதமடையவில்லை
விமானம் உடைந்த போதிலும் இந்த பெட்டிகள் சேதமடையவில்லை. இதன் மூலம் விமான விபத்து எப்படி நடந்தது என்பது தெரியவரும். இந்த கருப்பு பெட்டி மூலம் விமானம் புறப்பட்ட இடத்திலிருந்து தரையிறங்கியது வரை 24 மணி நேரத்துக்கான தகவல்களை பதிவு செய்து வைத்திருக்கும்.

விமானத்தின் திசை
விமானம் புறப்பட்ட போது ஏற்பட்ட வேகம், விமானத்தின் திசை, தரையிறங்கிய போது வேகம், தரையிறங்கிய போது காற்றின் அழுத்தம் என்ன, விமானத்தை நிறுத்துவதற்காக முயற்சித்தும் ஏன் அதில் விமானி வெற்றி பெறவில்லை உள்ளிட்ட தகவல்கள் அதில் கிடைக்கும். இதன் மூலம் விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணத்தை கண்டறிய முடியும்.

காக்பிட்
அது போல் சிவிஆர் எனப்படும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் என்பது காக்பிட்டில் உள்ள விமானிகள் தங்களுக்கு நடத்திய உரையாடல் குறித்தும், அவர்கள் விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் பேசியது குறித்தும் தரையிறக்குவதற்கு அந்த அதிகாரி அறிவுறுத்தியது என்ன, விமானிகளின் மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்தும் தெரியவரும்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications