கேரளாவில் மே 23 வரை லாக்டவுன் நீட்டிப்பு.. 4 மாவட்டங்களில் "டிரிபிள் லாக்டவுன்".. பினராயி அறிவிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் மே 23ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில் கேரளாவில் மிக மோசமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தினமும் 35 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா கேஸ்கள் கேரளாவில் பதிவாகி வந்தது.
நேற்று கொஞ்சம் கொரோனா கேஸ்கள் குறைவான நிலையில் இன்றும் கொரோனா கேஸ்கள் கொஞ்சம் சரிந்துள்ளது . கேரளாவில் இன்று 34694 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. 93 பேர் இன்று கேரளாவில் கொரோனா காரணமாக பலியானார்கள்.

கேரளா
கேரளாவில் இதுவரை மொத்தமாக 6243 பேர் பலியாகி உள்ளனர். 31319 பேர் இன்று கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். கேரளாவில் மொத்தமாக 1636790 பேர் குணமடைந்து உள்ளனர். கேரளாவில் மொத்தமாக 20,50,890 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஆக்டிவ் நோயாளிகளாக 4,38,909 பேர் உள்ளனர்.

லாக் டவுன்
இந்த நிலையில் கேரளாவில் மே 16ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இருந்த லாக்டவுன் தற்போது மே 23ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா கேஸ்கள் குறையாத காரணத்தாலும், பாசிட்டிவிட்டு ரேட் இன்னும் குறையாத காரணத்தாலும் லாக்டவுன் நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நீட்டிப்பு
அதோடு கேரளாவில் 4 மாவட்டங்களில் டிரிபிள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. டிரிபிள் லாக்டவுன் என்றால் கூடுதல் கட்டுப்பாடுகளோடு, மக்கள் மொத்தமாக வெளியே வராத அளவிற்கு லாக்டவுன் போடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிச்சூர், மலாபுரத்தில் இந்த கூடுதல் கட்டுப்பாடுகளோடு லாக்டவுன் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏன்
இந்த மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் அதிகம் உள்ளது. திருவனந்தபுரத்தில் 42600 , எர்ணாகுளத்தில் 69227 திரிச்சூரில் 55255, மலாபுரத்தில் 49,887 ஆக்டிவ் கேஸ்கள் நேற்று வரை இருந்தன. இங்கு டிபிஆர் சதவிகிதம் மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே இங்கு கூடுதல் கட்டுப்பாடுகளோடு லாக்டவுன் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications