மறுபடியும் மொதல்ல இருந்தா? வந்தாச்சு லாக்டவுன்! அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. கதிகலங்கி நிற்கும் கேரளா!
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 14 வயது சிறுவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் அப்போது சுமார் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சிலர் மர்ம காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தனர். அவர் திடீரென உயிரிழந்த நிலையில், அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், உயிரிழந்தவர்கள் நிபா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு குறித்த அச்சுறுத்தல் மேலெழுந்திருக்கிறது. மலப்புரம் மாவட்டத்தில் 14வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனை கேரளாவில் உள்ள ஆய்வகங்கள் உறுதி செய்திருக்கின்றன. இருப்பினும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வுகத்தின் முடிவுக்காக காத்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், "மலப்புரம் மாவட்டம் பாண்டிகாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் உள்ள ஆய்வகத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் சிறுவனுக்கு நிபா பாதிப்பு இருப்பது தெரியவந்தாலும், புனே தேசிய வைராலஜி நிறுவனத்திடம் இருந்து இறுதி உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கிறோம்.
நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க மலப்புரத்தில் கட்டுப்பாட்டு அறையை சுகாதாரத் துறை அமைத்திருக்கிறது. மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டு திறக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாண்டிக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சில வார்டுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications