மறுபடியும் மொதல்ல இருந்தா? வந்தாச்சு லாக்டவுன்! அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. கதிகலங்கி நிற்கும் கேரளா!
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 14 வயது சிறுவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் அப்போது சுமார் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சிலர் மர்ம காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தனர். அவர் திடீரென உயிரிழந்த நிலையில், அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், உயிரிழந்தவர்கள் நிபா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு குறித்த அச்சுறுத்தல் மேலெழுந்திருக்கிறது. மலப்புரம் மாவட்டத்தில் 14வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனை கேரளாவில் உள்ள ஆய்வகங்கள் உறுதி செய்திருக்கின்றன. இருப்பினும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வுகத்தின் முடிவுக்காக காத்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், "மலப்புரம் மாவட்டம் பாண்டிகாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் உள்ள ஆய்வகத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் சிறுவனுக்கு நிபா பாதிப்பு இருப்பது தெரியவந்தாலும், புனே தேசிய வைராலஜி நிறுவனத்திடம் இருந்து இறுதி உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கிறோம்.
நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க மலப்புரத்தில் கட்டுப்பாட்டு அறையை சுகாதாரத் துறை அமைத்திருக்கிறது. மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டு திறக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாண்டிக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சில வார்டுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications