நான் நாட்டிற்காக உயிர் கொடுக்க பிறந்த போர் வீரன்.. விமானி தீபக்கின் தீரம் குறித்து உருக்கமான கவிதை
திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்தில் பலியான விமானி தீபக் வசந்த் சாத்தேவின் நண்பர் நிலேஷ் சாத்தே அவர் குறித்து உருக்கமான பதிவை தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார். அதில் ஒரு போர் வீரன் எழுதிய கவிதை தனது நினைவுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.
Recommended Video
கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று ரன்வேயில் இறங்கிய போது சறுக்கி விழுந்து இரண்டாக பிளந்தது. இந்த விபத்தில் காக்பிட்டில் இருந்த விமானி தீபக் வசந்த் சாத்தே சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.

எக்ஸ்பிரஸ்
இதுகுறித்து அவரது நண்பர் நிலேஷ் சாத்தே தனது பேஸ்புக்கில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறுகையில் எனது நண்பர் தீபக் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயிலிருந்து பயணிகளை அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விமானியாக இருந்தார்.

கோழிக்கோடு
இந்த விமானம் நேற்று இரவு கோழிக்கோடில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருந்து நாம் என்ன தெரிந்துக் கொண்டோம் என்பதை பார்ப்போம். லேண்டிங் ஆகும் போது கியர்கள் இயங்கவில்லை. இந்திய விமான படையின் முன்னாள் விமானி விமானம் தீப்பிடிப்பதிலிருந்து காக்க 3 முறை விமான நிலையத்தை சுற்றி எரிப்பொருளை காலி செய்தார்.

180 பயணிகள்
அதனால்தான் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையிலும் எந்த ஒரு புகையும் காண முடியவில்லை. விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பே என்ஜினை நிறுத்திவிட்டார் தீபக். மூன்றாவது முறை விமானத்தை தரையிறக்கினார். அதன் வலது பகுதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானி இறந்த நிலையிலும் 180 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார் என்றார்.
போர்வீரன் கவிதை
நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக ஒரு போர் வீரன் தனது உயிரையே தியாகம் செய்வதாகவும் தீபக்கின் தியாகத்தை பார்க்கும் போது ஏற்கெனவே ஒரு போர் வீரன் எழுதிய கவிதை எனக்கு நினைவுக்கு வருவதாகவும் நிலேஷ் கூறியுள்ளார். அந்த கவிதை பின்வருமாறு:
நான் போர் களத்தில் இறந்தால்
என்னை பெட்டியில் அடைத்து வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள்
நான் வாங்கிய பதக்கங்களை என் மார்பில் வையுங்கள்
என் தாயிடம் நான் சாதித்ததை கூறுங்கள்
என் தந்தை எதற்காகவும் தலைகுனிய கூடாது என சொல்லுங்கள்
இன்றிலிருந்து அவர் எதற்காகவும் பதற்றமடைய மாட்டார்
என் சகோதரனை நன்றாக படிக்கச் சொல்லுங்கள்
என் சகோதரியை கவலைப்பட வேண்டாம் என சொல்லுங்கள்
நான் இன்னொரு முறை பிறக்கப் போவதில்லை
மேலும் எனது அன்பானவர்கள் அழ வேண்டாம்...
ஏனென்றால் நான் நாட்டுக்கு உயிர் தியாகம் செய்ய பிறந்த போர் வீரன்...........
இவ்வாறாக அந்த கவிதை இருக்கிறது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications