கண்ணை மறைக்கும் வெற்றி.. பட்ட கஷ்டத்தை மறந்த ஆளும் கட்சி.. கொரோனாவை உதாசீனப்படுத்தும் பிற கட்சிகள்
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளால் மகிழ்ச்சி அடைந்த கட்சிகள் கூட்டம் கூட்டமாக வெற்றி ஊர்வலத்திற்கு செல்லும் போது கொரோனாவை மறந்தது சுகாதாரத் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை போட்டியிட்டன.
மொத்தம் 941 பஞ்சாயத்துகளில் 442 பஞ்சாயத்துகளில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாம் இடத்தில் 344 பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கட்சியும் 33 பஞ்சாயத்துகளில் பாஜகவும் முன்னிலையில் உள்ளது.

ஊர்வலம்
3 கூட்டணிகளுமே கணிசமான இடங்களில் வெற்றி வாய்ப்பை பெற்றதால் அக்கட்சிகளின் தொண்டர்கள் வெற்றியை ஊர்வலமாகச் சென்று கொண்டாடி வருகிறார்கள். ஆனால் இந்த ஊர்வலங்களில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எந்த கட்சியினரும் பின்பற்றவில்லை.

கண்ணை மறைக்கும் வெற்றி
வெற்றி கண்ணை மறைத்ததால் பெரும்பாலானோர் மாஸ்க்களை போடவில்லை. சமூக இடைவெளி காற்றில் விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு நெறிமுறைகளை கொஞ்சம் கூட பின்பற்றாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவினால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பரவலின் மத்தியில் இந்தியா இருக்கிறது. அதிலும் கேரளாவில் இரண்டாம் அலை வீசி வருகிறது. இங்கு நாள்தோறும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவ்வாறிருக்கையில் கொரோனா விதிகளை கொஞ்சமும் மதிக்காதது ஏன் என தெரியவில்லை.

கொரோனா விதிகள்
மேலும் கொரோனாவை ஒழித்தலில் பிற மாநிலங்களுக்கும் பிற நாடுகளுக்கும் முன்மாதிரியாக இருந்தது கேரளா மாநிலம். கேரளாவின் மாடலை பெரும்பாலானோர் பின்பற்றி தங்கள் மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தினர். ஆனால் அந்த கஷ்டத்திற்கு கொஞ்சம் கூட செவி சாய்க்காமல் இந்த கட்சித் தொண்டர்கள் அதிலும் ஆளும் கட்சி கூட்டணியும் இணைந்து கொரோனா விதிகளை புறந்தள்ளியிருப்பது வேதனையை அளிக்கிறது.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications